Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுயநலமான நண்பர்களாக இருப்பார்ங்க... இவங்ககூட பழகுறது எப்பவும் ஆபத்துதான்...!
அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கும் ஒரு மோசமான குணம் என்றால் அது சுயநலம்தான். இந்த சுயநலம் ஒருவரிடம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
சுயநலம் கொண்ட ஒருவருடன் பழகுவது அல்லது நண்பர்களாக இருப்பது ஒருபோதும் நல்ல அனுபவமாக இருக்காது. அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மற்றவர்களை பலிகொடுக்க தயங்க மாட்டார்கள். அத்தகைய மோசமான நபர்களிடம் இருந்து விலகியிருப்பதுதான் நல்லது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களிடம் இந்த சுயநல எண்ணம் அதிகமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகாரம் அவர்களின் கையில் இல்லாத உறவில் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் தங்களுக்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். சுயநலமான ராசிகளில் முதலாவது இடத்தில் இவர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் மற்றவர்கள் அவர்களை உண்மையாக நேசித்தால் அவர்களின் நாசீசிசம் பொறுத்துக்கொள்ளக்கூடியது.
அவர்களின் இதயங்கள் உடைபடும் போது, அவர்கள் கட்டுப்படுத்த முடியாத மிருகங்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் அனைவரையும், எல்லாவற்றையும் தாக்குவதால் அவர்களின் கோபம் கொடூரமானதாக இருக்கும். பிறர் மனது எப்படி கஷ்டப்படும் என்று அவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உந்துதல் எப்போதும் சுய திருப்தி என்பதை நன்கு அறிவார்கள். அவர்களின் அன்புக்குரியவர்கள் கூட மேஷ ராசிக்காரர்களின் சுயநலத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் சவாலில் இருந்து பின்வாங்க மாட்டார்கள், அவர்கள் விரும்புவதைப் பெறுவதற்கு மற்றவர்களுக்கு கெடுதல் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
அவர்களின் மிகவும் தீங்கு விளைவிக்கும் பண்புதான் அவர்கள் சுயநல இராசி அறிகுறிகளில் பட்டியலிடப்படுவதற்கான முதன்மைக் காரணமாகும். மேஷ ராசிக்காரர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்கிறார்கள், அதனால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அது உங்கள் தவறு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூக பட்டாம்பூச்சிகளாக இருப்பதால், சில சமயங்களில் அவர்கள் உண்மையில் எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களே மறந்துவிடலாம். அவர்களின் புத்திசாலித்தனமான நகைச்சுவைகளும், வேடிக்கையான நிகழ்வுகளும், அவர்களின் கர்வமான மனநிலையை மறைப்பதற்கான சூழ்ச்சிகளைத் தவிர வேறில்லை. மிதுன ராசிக்காரரர்கள் தங்களுக்குள் பல அடையாளங்களைக் கொண்டிருப்பதால் அவர்களின் உண்மையான சுயத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிதுன ராசிக்காரர்கள் மக்களை வெல்ல முயற்சிப்பதற்காக பல்வேறு அடையாளங்களை உருவாக்கியுள்ளனர். அனைவரின் அபிமானத்தையும் பாராட்டையும் பெற இருண்ட பாதையில் செல்வதை ராசிக்காரர்கள் பொருட்படுத்துவதில்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் சுயநலம் அவர்களுடன் இருக்கும் அனைவரும் தெரிந்ததே. ஆனால் அவர்கள் அதனை அறிய மாட்டார்கள். அவர்கள் தங்களை யாருக்கும் கடமைப்படாத சுதந்திர ஆன்மாக்கள் என்று கருதுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் சுயசார்புக்கான நாட்டம் அவர்களை மிகவும் சுயநல ராசி அறிகுறிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. நாளின் ஒவ்வொரு நிமிடமும், கும்ப ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுகிறார்கள். யாராவது அவர்களுக்கு எதிராக நடந்தால் அவர்களை உடனடியாக அவர்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றி விடுவார்கள், பின்னர் அவர்களே வந்து தங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள். மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது முழுமையான அலட்சியம் காரணமாக அவர்கள் சுயநலத்தின் அடையாளமாக உள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












