சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 01 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...

Venus Transit In Pooratathi Nakshatra On April 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். கிரகங்களில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

மேலும் இவர் செல்வம், அழகு, காதல், ஈர்ப்பு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். தற்போது அந்த மீன ராசியில் பயணித்து வரும் சுக்கிரன், மார்ச் மாத தொடக்கத்தில் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார்.

Venus Transit In Pooratathi Nakshatra On April 2025 These Zodiac Signs Will Be Lucky

அதன் பின் சுக்கிரன் ஏப்ரல் 01 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால், எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மீனம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது. குறிப்பாக ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவதோடு, வணிகர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்கள மற்றும் பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வ, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை அல்லது வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலை வலுபெறும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, February 18, 2025, 23:43 [IST]
Desktop Bottom Promotion