இந்த ஜாதக அமைப்பிற்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருக்குமாம்..!

பொதுவாகவே ஒருநபர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை தான் விரும்பியே வைத்திருக்கமாட்டார்கள்.. இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருந்தாலும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மோசமான நிலைகள் அவரை இதைச் செய்ய வைக்கும் என்று ஜோதிடம் சொல்லுகிறது..

அவை எந்த கிரகங்கள்? அந்த கிரகம் உங்கள் ஜாதகத்தில் என்ன செய்கிறது?அவற்றின் நிலைமைகள் என்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

These type of jathagam people will cheat their life partners extra marriage life

ஜாதகத்தில் கூடுதல் திருமண வாய்ப்புகளை ஏற்படுத்தும் கிரக நிலைகள்

1. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் 7ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகக்காரர்களுக்கு கூடுதல் திருமண உறவு இருக்குமாம்..

2. ஜாதகத்தில் சுக்கிரனும் புதனும் இணைந்து 10ஆம் வீட்டில் அல்லது லக்னத்தில் இருந்தால் அவர்களுக்கும் திருமணத்திற்கு புரம்பான உறவு இருக்கும்..

3. ஜாதகத்தில் 7ஆம் வீட்டில் சந்திரனும் சனியும் இணைந்திருந்தால், அவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்துக் கொள்வார்களாம்..

4. ஜாதகத்தில் 7ஆம் வீட்டில் சூரியன், சனி, சுக்கிரன், செவ்வாய், சந்திரன் ஆகியோருடன் அசுபக் கிரகங்களும் காணப்பட்டால், அது கூடுதல் திருமண உறவைக் குறிக்கிறது.

5. ஜாதகத்தில் 7ஆம் வீட்டின் அதிபதி 6, 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருந்தால், அது இரண்டு திருமணங்களைக் குறிக்கிறது.

6. ஜாதகத்தில் சனி மற்றும் ராகு அல்லது கேதுவின் சேர்க்கை இருந்தால், அது இரண்டு திருமணங்களைக் குறிக்கிறது.

7. ஜாதகத்தில் 7ஆம் வீட்டில் சனி காணப்பட்டால், அது இரண்டு திருமணங்களைக் குறிக்கிறது.

8. ஒரு ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து இருந்தால், அந்த நபர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உறவு வைத்திருப்பார் என்று சொல்லப்படுகிறது..

கூடுதல் திருமண உறவை நிறுத்த பரிகாரங்கள் என்ன?

கணவரின் சட்ட விரோதமான உறவை முடிக்க சில ஜோதிட பரிகாரங்கள் உள்ளன. துர்கா தேவியின் கோவிலுக்கு வாரத்திற்கு மூன்று முறை தரிசனம் செய்வது முதல் மற்றும் முக்கிய பரிகாரம். இது திருமணத்திற்கு நீண்ட ஆயுளை வழங்குவதோடு, உங்கள் கணவரை திருமணத்திற்கு தவறான உறவில் இருந்து விலக வைக்கிறது.. மேலும் மனைவிகள் இந்த மந்திரத்தை சொல்ல கணவன் தவறான உறவில் இருந்து விலகிவிடுவாரம்..

|| நமஸ்கரோமி நமை ஷதம் துஹே
ஷனை ச சுர் தே கம்
நமோ வித்மஹே ஷரதே ஸுதே
ஷரோமி கஹே ஸுதா அஞ்சு தும் ||

அதுபோலவே மனைவியின் தவறான உறவை தடுக்க வசீகரன் மந்திரம் சொல்ல பெண்ணை உங்கள் பக்கம் ஈர்த்து அவளை மீண்டும் வெல்ல உதவும். மனைவியின் கூடுதல் திருமண உறவை அகற்ற இது பயனுள்ள பரிகாரமாக இருக்கும்..

|| ஓம் நமஹ் காமாக்ஷி தேவி (பெண் அல்லது பெண்ணின் பெயர்)
நாரி மே வசம் குரு குரு ஸ்வாஹா ||

இதுபோலவே ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் சரியான நேரத்தில் பரிக்காரம் செய்யப்படாமல் இருந்தால் அவர்களின் வாழ்க்கை துணை 2வது வழ்க்கையை தேடி போய்விடுவார்கள்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 27, 2024, 21:26 [IST]
Desktop Bottom Promotion