Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
1 வருடம் கழித்து உருவாகியுள்ள சுக்ராதித்ய ராஜயோகம்: அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்கு பிரமாதமா இருக்கும்...
Sukraditya Rajyog In Gemini 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சூரியன் புதனின் மிதுன ராசியில் ஜூன் 15 ஆம் தேதி முதலாக பயணித்து வருகிறார். அதே வேளையில் இந்த மிதுன ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார்.
இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 1 ஆண்டிற்கு பின் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது மிதுன ராசியில் உருவாகியுள்ள சுக்ராதித்ய ராஜயோகத்தால் ஜூலை 16 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்றலாம். இதனால் உங்களின் வருமானம் பெருகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்கார்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறக்கூடும். வணிகர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும் மற்றும் நிறைய லாபத்தையும் தரும். நிதி ரீதியாக வலுவாக இருக்கும். இதனால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். செயல்திறனும், வேலைகளும் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications