Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரையும் விட அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்...!
Numerology: எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி அல்லது அவர்கள் வாழ்க்கைப்பாதை எண்ணின் அடிப்படையில் ஒரு நபரின் இயல்பு மற்றும் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவருடைய ராசியின் மூலம் ஒரு நபரின் தன்மையை புரிந்து கொள்வது போல, எண் கணிதத்திலும் இந்த விஷயங்களை பிறந்த தேதியின் அடிப்படையில் கண்டறிய முடியும்.
ஜோதிடத்தில், 1 முதல் 9 வரை வாழ்க்கைப்பாதை எண் உள்ளது, இது ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையைக் காட்டுகிறது. உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 17 ஆம் தேதி பிறந்தவர்களின் வாழ்க்கைப்பாதை எண் 1+7=8.

எண் கணிதத்தின் அடிப்படையில் பிறந்த தேதியிலிருந்து ஒரு நபரின் இயல்பு மற்றும் வாழ்க்கையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். பிறந்த தேதி 5, 14, அல்லது 23 உள்ளவர்களுக்கு, அவர்களின் எண் 5 ஆக இருக்கும். இந்த எண் புதன் கிரகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் தாக்கத்தில் புத்திசாலிகளாக இருப்பது அவர்களின் இயல்பு. இந்த எண்ணில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். அவர்களின் குணங்கள் மற்றும் ஆளுமைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் புத்திசாலிகள்
வாழ்க்கைப்பாதை எண் 5 உள்ளவர்கள் பிறப்பிலிருந்தே மிகவும் புத்திசாலிகள் என்று எண் கணிதம் நம்புகிறது. அத்தகைய சூழ்நிலையில், 5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பட்டியலில் வருகிறார்கள். அவர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் மூளையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஏராளமான பணம் சம்பாதிக்கிறார்கள்.
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் சிறப்பு அருள் இவர்களுக்கு எப்போதும் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் புத்திசாலித்தனத்தாலும், திறமையாலும், அவர்கள் உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் அடைகிறார்கள். இந்த மக்கள் அதிர்ஷ்டத்தை விட கர்மாவை நம்பியுள்ளனர் மற்றும் வாழ்க்கையில் சவால்களை ஏற்று சமாளிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளனர்.
வாழ்க்கையில் ஒவ்வொரு தடையையும் சவாலாக ஏற்று போராடி வெற்றி பெறுவார்கள். இவர்கள் புதிய யோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி லாபம் ஈட்டுகின்றனர். வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்கள் வேலையை விட வியாபாரத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள் மற்றும் அதில் வெற்றி பெறுவார்கள். இந்த எண்ணில் பிறந்த நபர்களின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் நீண்ட காலமாக எந்த விஷயத்திற்கும் வருத்தப்படுவதில்லை. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
லட்சுமி தேவியின் அருள்
இந்த எண்ணில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல பண விஷயத்திலும் பெரிய அதிர்ஷ்டசாலிகள். லட்சுமி தேவியின் சிறப்பு அருள் இவர்களுக்கு உள்ளது. அவர்களின் வாழ்நாள் முழுவதும் செலவு செய்வதற்கான பணத்தை அவர்கள் விரைவாக சம்பாதிக்கிறார்கள். இருப்பினும், இவர்கள் தங்கள் குணங்களால் மட்டுமே மக்களிடம் மரியாதையைப் பெறுகிறார்கள். இவர்கள் பொதுவாக தொழிலதிபர்களாக இருப்பார்கள், ஒருவேளை வேலையில் இருந்தாலும் உயர் பதவியில் இருப்பார்கள்.
அவர்களின் வசீகரமான ஆளுமை காரணமாக, இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்போதும் மக்கள் மத்தியில் ஈர்ப்பின் மையமாக மாறலாம். இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் முகத்தில் சோகம் மிக அரிதாகவே காணப்படும். அனைத்திலும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலும் காதல் வாழ்க்கையில் அவர்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












