Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்கும் சக்தி இருக்குமாம்..
Numerology: எண்களை கொண்டு கணிக்கக்கூடிய ஒரு வகையான ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண்கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றலைக் கொண்டிருக்கும். அதனால் தான் ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில், திறமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும். இதற்கு அவர்களின் பிறந்த தேதியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அதுவும் சில தேதிகளில் பிறந்தவர்கள் மர்மமானவர்களாகவும், வலுவான உள்ளுணர்வு கொண்டவர்களாகவும், சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஏதோ சக்தியைக் கொண்டவர்கள் போன்றும் இருப்பார்கள். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை கணிக்கும் வகையிலான ஆற்றல் உள்ளது என்பதைக் காண்போம்.

மார்ச் 11
மார்ச் 11 ஆம் தேதி பிறந்தவர்கள் அதிசய சக்தியைக் கொண்டிருப்பார்கள். அதாவது இவர்களிடம் வலுவான உள்ளுணர்வு இருக்கும். இவர்களுக்கு நடக்கப்போவதை சரியாக கணிக்கும் வகையிலான அசாதாரண திறனைக் கொண்டிருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒருவரைப் பார்த்ததும், அவர்களின் மனதில் உள்ளதை அறியும் வகையிலான ஆற்றலைக் கொண்டிருப்பார்கள்.
நவம்பர் 22
நவம்பர் 22 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிசயப் பிறவிகள். இவர்கள் தைரியமானவர்களாகவும், வீரர்களாகவும் இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வினோதமான தொலைநோக்கு மூலம் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். இவர்களின் கூர்மையான மனமும், உக்கிரமான ஆர்வமும் அவர்களை எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணித்துக் கூறும் நபர்களாக்குகின்றன.
ஜூலை 7
ஜூலை 07 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ஸ்பெஷலானவர்கள். இவர்கள் வலுவான உள்ளுணர்வுடன், உணர்ச்சிரீதியான நுண்ணறிவைக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வை முன்கூட்டியே இவர்கள் உணர்வார்கள். மேலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் நுட்பமான குறிப்புக்களைக் கொண்டு, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொள்வார்கள்.
டிசம்பர் 25
டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை காரணம் அல்ல. இந்த தேதியில் பிறந்தவர்கள் வியக்கத்தக்க உள்ளுணர்வைக் கொண்டிருப்பார்கள். இவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் மிஸ் ஆகாது. ஏனெனில் இவர்கள் நன்கு பகுப்பாய்வு செய்து, ஒருசில குறிப்புக்களைக் கொண்டே உறுதியாக ஒரு விஷயம் நடக்கப்போவதைக் கூறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications