Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜவாழ்க்கை தேடிவரப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
ஜோதிடத்தின் படி கிரகங்கள் சீரான இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன, இந்த இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேத ஜோதிடத்தின்படி, சைத்ர நவராத்திரி மார்ச் 30, 2025 அன்று தொடங்குகிறது. அதே நேரத்தில், ஏப்ரல் 03, 2025 அன்று செவ்வாயின் பெயர்ச்சி தொடங்குகிறது.
கிரகங்களின் தளபதியான செவ்வாயின் பெயர்ச்சியானது மிகவும் சக்தி வாய்ந்தது. சைத்ர நவராத்திரியில் செவ்வாய் கடக ராசியில் சஞ்சரிக்கிறார், இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்களை அளிக்கப்போகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடையப்போகிறார்கள்.

போர் கிரகமான செவ்வாய், ஆற்றல், லட்சியம், தைரியம் மற்றும் மன உறுதியை அளிக்கிறது. ராசிகளின் வழியாக செவ்வாய் நகர்வது ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உறுதி செய்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
சைத்ர நவராத்திரியில் செவ்வாயின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வம் மற்றும் பேச்சு இல்லத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் விளைவாக அவர்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். அவர்கள் சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவத்தைப் பெறுவார்கள். மேலும், வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை அடையலாம், மேலும் அவர்கள் வியாபாரத்தை புதிய பகுதிகளில் விரிவுபடுத்தலாம்.
மற்றவர்களுக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் உங்கள் சிக்கிய பணம் அனைத்தும் எளிதாக மீட்கப்படும், மேலும் வாகனம் அல்லது சொத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பேச்சில் முன்னேற்றம் ஏற்படும், இதனால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும். செவ்வாயின் ராசிப் பெயர்ச்சி கன்னி ராசியின் பதினொன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதால், கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வருமானத்தை மேம்படுத்த நிறைய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை மேம்படும்.
அவர்களின் வருமானத்திற்கு புதிய வழிகள் திறக்கும். இதனுடன், அரசு அல்லது நிர்வாகத் துறைகளில் சில சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் அது எதிர்பாராத நன்மைகளை அளிக்கும். கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும், மேலும் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிக்க ஆரோக்கியம் உதவியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை அளிக்கப்போகிறது. செவ்வாய் விருச்சிக ராசியின் அதிபதியாக இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். அவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும், மேலும் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது மற்றும் வருமானம் அதிகரிக்கும். அவர்களின் சமூக உறவு வலுவடையும், மேலும் குறுகிய அல்லது நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அரசாங்க வேலைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இப்போது அதில் ஒருபடி முன்னேறுவார்கள். விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
