Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
செவ்வாய்-சந்திரன் உருவாக்கும் மகாபாக்ய ராஜயோகம்: டிசம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Maha Bhagya Rajyog 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களிலேயே சந்திரன் மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் சந்திரன் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் இணைந்து, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் செவ்வாயும், சந்திரனும் இணைந்து மிகவும் மங்களகரமான மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியையும் பெறுவார்கள்.

ஜோதிடத்தின் படி, டிசம்பர் 17 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருகிறார். இதனால் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது டிசம்பர் 20 ஆம் தேதி வரை இருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் மகாபாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கனவுகள் நனவாகும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வணிகர்களுக்கு புதிய ஆர்டர் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியும், நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் மகா பாக்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications