18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் செவ்வாய் புதனின் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..

Mars Mercury Conjunction 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் பல ஆண்டுகள் கழித்து சில கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அவ்வாறு கிரகங்கள் ஒன்றிணையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகள் கழித்து துலாம் ராசியில் நிகழவுள்ளது. இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.

Mars Mercury Conjunction 2025 In Libra After 18 Years List Of Lucky Zodiac Signs

அதில் 3 ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறவுள்ளனர். அதோடு சிக்கிய பணத்தையும் பெற வாய்ப்புள்ளது. இப்போது 18 ஆண்டுகள் கழித்து துலாம் ராசியில் நிகழும் செவ்வாய் புதனின் அரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மருத்துவம், சொத்து தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மாமியார், மாமனார் உடனான உறவு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஐடி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். சமூக சேவைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இக்காலத்தில் பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். முக்கியமாக எந்த வேலையை எடுத்தாலும் அதை வேகமாக செய்து முடிப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று, நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலைகள் வேகமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, July 16, 2025, 9:20 [IST]
Desktop Bottom Promotion