Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
உங்க ராசியை சொல்லுங்க.. மகா சிவராத்திரி நாளில் நீங்க எந்த சிவ மந்திரத்தை சொல்லணும்-ன்னு சொல்றோம்..
Maha Shivratri 2025: மகா தேவரான சிவபெருமானுக்கு உரிய நாள் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது.
இந்த மகா சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் சிவனை நினைத்து விரதமிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபட்டு வருவார்கள். இந்நாளில் உலம் முழுவதும் உள்ள மக்கள் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

இந்த புனிதமான நாளில் சிவலிங்கத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, பூஜைகளை செய்வார்கள். மேலும் சிவபெருமானுக்குரிய மந்திரங்கள் மற்றும் பாடல்களை பாராயணம் செய்வார்கள். இந்நாளில் ஒவ்வொருவரும் சிவபெருமானின் பரிபூர்ண ஆசியைப் பெற விரும்பினால், ராசிக்குரிய சிவ மந்திரத்தை சொல்வது நல்லது. இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த சிவ மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் ருத்ராய நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது. இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் அனைத்து வகையான துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் "ஓம் நமச்சிவாய நமஹ" என்னும் பஞ்சாக்ஷரி மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் அனைத்து வகையான தீமைகளும் விலகும்.
மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் மகேஷ்வராய நமஹ" என்னும் சிவனுக்கு உரிய மந்திரத்தை சொல்வதன் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, சிவனின் அருளால் இலக்குகளை அடைய முடியும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் "ஓம் நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், சனி மற்றும் ராகுவுடன் தொடர்புடைய கால சர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் நமசிவாய காலம் மகாகால் காலம் கிருபாலம் ஓம் நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபட்டு வந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி, சிவனின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் நமசிவாய குரு தேவே நமஹ" என்னும் மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் சொல்வதன் மூலம், சிவனின் அருளால் வாழ்க்கையில் புதிய வழிகளையும், புதிய வாய்ப்புக்களையும் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சந்திரமௌலேஷ்வர் நமஹ" என்னும் சிவ மந்திரத்தை பாராயணம் செய்தால், பதட்டம், மனச்சோர்வு மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ உள்ள உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் "ஓம் நமோ பகவதே ருத்ராய" என்னும் சிவ மந்திரத்தை மகா சிவராத்திரி நாளில் பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை தனுசு ராசிக்காரர்கள் சொல்வதன் மூலம் உள் வலிமை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஷாம்பவே நமஹ" என்னும் மந்திரத்தை சொல்வது நல்லது. இந்த மந்திரத்தை சொன்னால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். சிவபெருமானின் ஆசியால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷிய மாமிருதத்" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதிகபட்ச நன்மைகளைப் பெற இரவு முழுவதும் மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் பசுபதயே நமஹ" என்னும் மந்திரத்தை மகா சிவராத்திரி நாளல் சொல்வதன் மூலம், சிவனின் ஆசியால் வெற்றிகள் குவியும் மற்றும் இலக்குகளை எளிதில் அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications