Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
50 ஆண்டுகளுக்கு பின் ஒரே சமயம் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Badra And Malavya Rajyog Will Make On June 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதோடு இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில சமயங்களில் ராஜயோகங்களும் உருவாகும். அதுவும் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட ராஜயோகங்கள் உருவாகி இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் இந்த ராஜயோகங்கள் சுக்கிரன் மற்றும் புதனால் உருவாகவுள்ளன. அதில் சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தையும், புதன் மிதுன ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளனர். இப்படி இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகங்களால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கப் போகிறது. இப்போது மாளவ்ய மற்றும் பத்ரா ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைத் தரப் போகிறது. அதுவும் வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கலாம். இதன் மூலம் பெருமளவில் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரப் போகிறது. வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகமானது மங்களகரமான பலன்களை அளிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு தொடர்பான வேலை வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











