உங்க ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனமாகிறதா? அப்போ ஜாக்கிரதை..!

சுக்கிர திசை நடந்தால் பணம் கொட்டும் என்பார்கள்.. ஆனால் மாறக சுக்கிரன் அஸ்தமானால் என்னவாகும் தெரியுமா? நமக்கு கிடைக்கும் உறவுகள், காதல், தாம்பத்தியம் , பணம், ஆடம்பரம் என அனைத்தும் சுக்கிர கிரகத்தில் இருந்துதான் வருகிறது. யாருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச ராசியில் அல்லது தனது சொந்த ராசியில் இருக்கிறார்களோ, அவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியையும் பெறுவார்கள் என்பது சொல்லப்படாத உண்மை..

அவர் வாழ்க்கையில் பணம், அன்பு, ஆடம்பரம், நல்ல உணவு, உடை ஆகியவற்றுக்கு எப்போதும் குறைவிருக்காது.. இந்த நபர்களின் உறவுகள் மிகவும் வலுவானவை, மேலும் அவர்கள் எப்போதும் காதல் உறவுகளிலும் வெற்றி பெறுகிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் மிகக் குறைந்த ராசியில் (கன்னி) இருந்தாலோ அல்லது பாவத்தால் அவதிப்பட்டாலோ அல்லது சுக்கிரன் ஜாதகத்தில் அஸ்தமானாலோ அந்த நபர் பணம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் காதல் உறவுகளில் எப்போதும் துன்பத்தையும் கஷ்டத்தையும் மட்டுமே பெறுவார்கள்..

bad luck will come when Venus Combusted

சுக்கிரன் அஸ்தமானால் இந்த நோய்கள் ஏற்படலாம்

சுக்கிரன் கிரகம் தொற்று அல்லது பாவத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு நபரின் ஜாதகத்தில் தாழ்ந்த லக்னத்தில் அமைந்திருந்தால், அந்த நபர் பிறப்புறுப்பு தொடர்பான பல நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுமட்டுமின்றி, இந்த கிரகம் பல வகையான நோய்களை உருவாக்குகிறது, காசநோய், கண் நோய்கள், ஹிஸ்டீரியா, சிறுநீரக நோய்கள், தோலில் அரிப்பு, குடலிறக்கம், சிறுநீரகம் போன்ற நோய்களும் வரக்கூடுமாம்.. அதுமட்டுமல்லாம் பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும் என்கிறது ஜாதகம்.. .

சுக்கிரன் அஸ்தமனம் செய்யும் போது என்ன நடக்கும்?

​​ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தமனம் செய்யும்போது அதன் சுப பலன் குறையத் தொடங்கும். திருமண வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சி போய்விடும், காதல் உறவில் வெற்றி இல்லாமல் போகும். அதனால் அவர்களின் காதல் தோல்வியடையக்கூடும்.. நல்ல ஆடைகள், அலங்காரம், வாசனை திரவியம், நல்ல சிகை அலங்காரம் போன்றவற்றில் பண இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சுக்கிரன் அமைவதற்கான பரிகாரங்கள் என்ன?

ஜாதகத்தில் சுக்கிரன் அமர் வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையன்று தயிர், சர்க்கரை, வெண்ணிற ஆடை, பால், தேங்காய், சாங்கு, மக்கானா, அரிசி போன்ற வெண்மையான பொருட்களை தானம் செய்யவும். வெள்ளிக் கிழமையன்று 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கீர் ஊட்டவும், சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த பிரகாசமான வண்ண ஆடைகளை நீங்கள் அணிந்துக் கொண்டு கோயிலுக்கு சென்று சுக்கிர பகவானை வழிபட வேண்டும்.. மேலும் சுக்கிரனை வணங்கும் போது கிழே சொல்லப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நல்லது.. ஓம் த்ரம் த்ரம் சாஹ் சுக்ரே நமஹ் என்று தொடர்ந்து சொல்லிவர உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் நல்ல நிலையில் இருந்து ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை ...

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion