Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
திருமணம் செய்வதாலா... உங்களுக்கு சட்டப்பூர்வாமா இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா? ஷாக் ஆகாம படிங்க!
திருமணம் என்பது இந்திய சமுதாயத்தின் வலுவான அடித்தளமாகும். இது நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டோடு இணைந்துள்ளதாக மட்டுமில்லாமல் சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது. இந்தியாவில் திருமண செய்வதால், உங்களுக்கு சட்ட ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

இரண்டு நபர்கள் திருமண உறவில் ஒன்றாக இணைந்து சங்கமமாகுவதை மிகுந்த ஆடம்பரத்துடனும் நிகழ்ச்சிகளுடனும் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடுகின்றன. உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் உறுதுணையான ஒரு துணையை நீங்கள் கண்டால், அது உண்மையில் மகிழ்ச்சியான உறவாக அமையும்.
இந்தியாவில், மதம் சார்ந்த திருமணங்களுக்காக 1954 ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பதிகள் இருவரின் சம்மதத்தோடு மட்டுமே திருமணம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும் திருமணத்தில் பல சட்டப்பூர்வமான நன்மைகளை நீங்கள் பெறலாம்.
நம்பமுடியாத சட்டப்பூர்வ நன்மைகளைப் பெறுவது திருமண யோசனையை மிகவும் நம்பிக்கையானதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும். இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதன் சட்ட நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தம்பதிகள் கூட்டாக வரி தாக்கல் செய்யலாம்
தம்பதிகளில் ஒருவர் சம்பாதித்து, மற்றொரு துணை வீட்டில் தங்கியிருந்தால், தம்பதியினர் கூட்டாக வரி தாக்கல் செய்ய இது ஒரு சிறந்த சூழ்நிலையாக இருக்கும். தம்பதிகள் தங்கள் வரிகளை தனித்தனியாக தாக்கல் செய்தால், வருமானத்தில் இருந்து இரண்டு விலக்கு தொகைகள் கட்ட வேண்டியிருக்கும். இரண்டு தொகைகளுக்கு பதிலாக ஒன்றாக குறைப்பதன் நன்மைகளை நீங்கள் பெறலாம்.
தம்பதிகள் திருமண வரிச் சலுகைகளைப் பெறலாம்
இந்தியாவில் திருமணமான தம்பதிகளுக்கு வரம்பற்ற திருமண வரி விலக்கு உள்ளது. எந்த வரியும் செலுத்துமால் எந்த நேரத்திலும் வரம்பற்ற சொத்துக்களை உங்கள் துணையின் பெயருக்கு நீங்கள் மாற்றலாம். கூட்டாட்சி வரிச் சட்டங்களின் கீழ் குடும்பக் கூட்டாண்மைகளை உருவாக்குவது வணிக வருமானத்தை குடும்ப உறுப்பினர்களிடையே பிரிக்க பெரிதும் உதவுகிறது.
அரசாங்க சலுகைகளைப் பெறலாம்
திருமணமானவுடன் தம்பதிகள் இருவரும் அரசாங்கம் வழங்கும் எல்லா சலுகைகளையும் பெற முடியும். ஆண், பெண் இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் மருத்துவக் காப்பீடு, ஊனமுற்றோர் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறலாம். வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் என்று வரும்போது கடன்கள் போன்ற பிற வகையான நன்மைகளும் தம்பதிகளுக்கு கிடைக்கும்.
சட்ட ரீதியாக முடிவெடுக்கலாம்
உங்களுக்கு திருமணமாகிவிட்டால், சட்ட ரீதியாக எல்லா முடிவுகளையும் எடுக்கும் பலன்களை நீங்கள் இருவரும் பெறலாம். மருத்துவமனைக்குச் செல்வது முதல் உங்கள் கணவன் அல்லது மனைவிக்கு முக்கியமான மருத்துவ சிகிச்சை முடிவுகளைக்கூட நீங்களே எடுக்கலாம். கல்வி, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பிற துறைகள் தொடர்பான உங்கள் முடிவோடு, உங்கள் மனைவிக்கும் சமமாக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பரம்பரைப் பலன்களைப் பெறலாம்
நீங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளும்போது, எந்த வரி விளைவுகளும் இல்லாமல் உங்கள் மனைவியின் சொத்தை நீங்களும் பெற முடியும். இருப்பினும், தம்பதிகள் இருவரும் திருமணம் செய்யாதபோது, அவர்கள் தனித்தனியாக வரி செலுத்த வேண்டும். ஆனால், திருமண உறவில் மனைவி இறந்தாலும், சட்டப்பூர்வ விருப்பம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு வாரிசு உரிமைகள் இருக்கும்.



Click it and Unblock the Notifications


