தம்பதிகளே! உறவில் நிம்மதி இல்லாம கவுன்சிலிங்கிற்கு போறீங்களா? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

தம்பதிகள் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையை அடையும் போது, அவர்கள் தங்கள் உறவையோ அல்லது திருமணத்தையோ காப்பாற்ற கடைசி முயற்சியாக கவுன்சிலிங்கை நோக்கி நகர்கிறார்கள்.

இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகள் உறவை தங்கள் துணையை சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். பல சண்டைகள், வாக்குவாதங்கள் உறவில் நிம்மதியை இழக்க செய்யலாம். இதனால், தம்பதிகள் ஒருவரையொருவர் விட்டு பிரிய முடிவு எடுக்கலாம். ஆனால், முடிவெடுக்கும் முன்பு அல்லது உறவில் தம்பதிகளுக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது, கவுன்சிலிங் செல்ல முடிவெடுக்கலாம்.

Things You Should Know Before Going To Couples Counseling In Tamil

கவுன்சிலிங் உண்மையில் பிரிந்து செல்லும் விளிம்பில் இருக்கும் தம்பதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும், ஆனால் தம்பதிகளுக்கு அதிர்ச்சியாக வரக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. கவுன்சிலிங் சிகிச்சைக்கு செல்லும் முன் ஒவ்வொரு தம்பதியும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கவுன்சிலிங் என்பது ஒரு அர்ப்பணிப்பு
கவுன்சிலிங் என்பது ஒரு முறை மேற்கொள்ளும் தீர்வல்ல. உறவில் இருக்கும் சிக்கல்களைச் சமாளிக்க நிறைய நேரம், முயற்சி மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகிறது. ஆதலால், இந்த செயல்முறைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பது மிக முக்கியம்.

உங்கள் உறவை மேம்படுத்த தேவையான வேலையைச் செய்ய தம்பதிகள் இருவரும் தயாராக இருக்க வேண்டும். உறவைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வேலையைச் செய்ய விரும்புகிறீர்களா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், கவுன்சிலிங்கால் எந்தப் பயனும் ஏற்படாது. உறவில் இணைந்திருக்க முயற்சியை கொள்ள தயாராக இருங்கள்.

சிகிச்சையாளர்கள் நடுநிலையானவர்கள்
உங்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நபர் உங்கள் பக்கத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், கவுன்சிலிங் என்பது உறவில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒருவரைப் பற்றியோ அல்லது ஒருவரைக் குறை கூறுவதோ அல்ல.

உங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் நடுநிலையானவராக இருப்பார்கள், அவர் தம்பதிகள் இருவரின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறார். உங்கள் உறவுகளில் இருவருக்கும் வேலை செய்யும் தீர்வுகளைக் கண்டறிய உதவுவார்.

அசௌகரியத்தை பெறலாம்
கவுன்சிலிங்கிற்கு செல்வது என்பது திருமண உறவில் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கடினமான உணர்ச்சிகள் மற்றும் சங்கடமான உரையாடல்களைக் கொண்டுவருவதாகும். முதலில் அசௌகரியமாக உணர்ந்தாலும், உங்கள் உணர்வுகளைப் பற்றி உங்கள் பங்குதாரர் மற்றும் சிகிச்சையாளரிடம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச வேண்டியது மிக முக்கியம்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முதல் படி இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆதலால், உங்கள் மனதில் உள்ள விஷயங்களை மற்றும் கேள்விகளை நீங்கள் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

வீட்டுப்பாடம் இருக்கலாம்
கவுன்சிலிங் அமர்வுகளுக்கு இடையில் உறவில் நெருக்கம் ஏற்படுவதற்கு வேலை செய்ய, நிபுணர் உங்களுக்கு வீட்டுப்பாடப் பணிகளை வழங்கலாம். இந்த பணிகளில் தகவல் தொடர்பு திறன் பயிற்சி அல்லது ஒன்றாக தரமான நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்கள் இருக்கலாம்.

உங்கள் உறவில் முன்னேற்றம் காண, கவுன்சிலிங் நிபுணர் கூறும் பணிகளைப் பின்பற்றுவது முக்கியம். இவை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒருவரையொருவர் நெருக்கமான அளவில் பிணைக்க உதவும். உங்கள் உறவை நன்றாக வலுப்படுத்த உதவும்.

கவுன்சிலிங் முடிப்பது பரவாயில்லை
கவுன்சிலிங் எல்லா தம்பதிகளுக்கும் வேலை செய்யாமல் போகலாம். அது உங்கள் உறவுக்கு வேலை செய்யவில்லை என்றால், பரவாயில்லை. இது உங்களுக்கு ஏன் வேலை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் துணை மற்றும் சிகிச்சையாளருடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

நினைவில் வைத்து கொள்ளுங்கள், கவுன்சிலிங்கின் முழு நோக்கம், உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

Story first published: Saturday, May 6, 2023, 21:27 [IST]
Desktop Bottom Promotion