Just In
- 4 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 5 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 5 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 6 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா? காரணம் இதுதான் ?
மணமுடித்து விட்டால் ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தனக்கு சொந்தமான பொருளாக கருதிக் கொள்கிறார்கள். அது தன்னிடம் இருந்து பிரிக்கமுடியாத பொருள் என எழுதப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ஒருவர் பிறிதொ
ஒருதலைக் காதல் தோல்விகளைப் போல் இன்று திருமண தோல்விகளும் அதிகரித்து விட்டன. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகி இருவரும் ஒத்துதான் தான் காதலிக்கிறார்கள். காதலித்து மணமுடிப்பதோடு இன்றைய கால இளைஞர்களின் காதல் அந்நியோனியம் முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். 12ம் வகுப்பு முடித்தால் தான் கல்லூரியில் சேர முடியும் என்பதைப் போல் திருமணம் செய்ய காதலையும் ஒரு ஆயுதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய காலத்து இளைஞர்கள். மணமுடித்து விட்டால் ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தனக்கு சொந்தமான பொருளாக கருதிக் கொள்கிறார்கள். அது தன்னிடம் இருந்து பிரிக்கமுடியாத பொருள் என எழுதப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஒருவர் பிறிதொருவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதன் விளைவு தான் ஈகோ எனும் ஜீரணிக்க முடியாத வியாதிக்கு வழிவகுக்கிறது. இதுபடிப்படியாக வைரஸ் போல் பல்கிப் பெருகி கடைசியில் விவாகரத்தில் போய் முடிகிறது. சரி முதல் வாழ்க்கையைத் தான் தவறாக தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள் என்றால் இரண்டாவது கணவரையும்/ மனைவியையும் ஏன் விவாகரத்து செய்கிறார்கள். இங்கு பிரச்சினை குறிப்பிட்ட ஆணோ பெண்ணோ இல்லை. பின்ன என்னவாகும் இருக்கும் என்று ஆழ்ந்து சிந்திக்கிறீர்களா? அப்போ இதைப் படியுங்கள். உங்களது நீண்ட நெடிய மனப்போராட்டத்திற்கு இந்த கட்டுரை எளிய மருந்தாக இருக்கும்.
விவாகரத்து எப்போதும் தற்செயலாக நடந்துவிடாது. இது ஒரு நெடுந்தூரப் பயணம். ஒரு விஷயத்தை முக்கியமாக நெடுங்காலமாக கவனிக்கும் போது இது நோய்க்கிருமிகளைப் போல் மெதுவாக வளர்கிறது. அதே சமயத்தில் விவாகரத்து என்பது எரிமலைக் குழம்புகளில் இருந்து வெடிக்கத் தயாராக இருக்கும் குமிழி அல்ல. மேலும் விவாகாரத்து எல்லாரும் கருதுமளவுக்கு அதிர்ச்சிக்கரமான சம்பவமாக கணவன் மனைவிக்குள் ஒருபோதும் இருந்ததும் இல்லை. இது நெடுங்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட தொடர் சண்டைகளின் வழி எட்டப்பட்ட நிரந்தர தீர்வாகவே கணவன் மனைவிகளால் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது இருவீட்டார் குடும்பத்துக்கு வேண்டுமானால் அதிர்ச்சிகரமான விஷயமாக இருக்கலாம்.
ஏன் இதைக் கவனிக்கவில்லை?
விவாகரத்து திடீரென ஒருபோதும் நடக்காது. வாழ்வின் எல்லா தளங்களிலும் சிக்கல்கள் உருவாகின்றன. அப்படி உருவாகின்ற சிக்கல்களில் தவிர்க்க முடியாத மனக்கசப்புகளை தம்பதியினரிடையே ஏற்படுத்திவிடுகின்றன. இந்தத் தொடர் குற்றச்சாட்டு அல்லது யாரோ ஒருவர் செய்கிற பிழை திருமணத்தின் அடித்தளத்தை தவுடு பொடியாக்கிவிடுகிறது.
MOST READ: சுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது? பணமழை யாருக்கு கொட்டப் போகுது?
இதைக் கேளுங்கள்:
தொடர்ச்சியாக நிம்மதியில்லாத திருமணவாழ்க்கையை அனுபவிக்கிறீர்களா இதைக் கட்டாயம் கேளுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் விவாகரத்து தவிர்க்க முடியாததாக இருக்கலாம் இருந்தபோதிலும் ஒரு சிறந்த திருமண வாழ்க்கையை நோக்கி வாழ முயற்சி செய்யுங்கள். விரும்பத்தகாத விஷயங்கள் கைமீறிப் போகும் போது அறிகுறிகளைப் பார்த்து உறவை மீண்டும் மகிழ்ச்சியான இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். இது கசப்பான அனுபவங்களிலிருந்து வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
புதுசா கல்யாணம் ஆனவங்க விவாகரத்து செய்ய இதான் காரணம்:
திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்குள் இருப்பவர்களா நீங்கள் ? திருமண வாழ்க்கையில் கீழ் வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நிச்சயம் அனுபவிக்கப் போகிறீர்கள். கீழ்காணும் அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் அதை நீங்கள் ஒரு பார்வை எடுத்து உங்களுக்குள் விரிசல் ஏற்படும் முன் ஆராய்ந்து சரிசெய்துக் கொள்வதற்காகவே இந்தப் பதிவு.