Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தை இல்லாத வாழ்க்கையும் இனிமை தான். எப்படி தெரியுமா?
குழந்தை இல்லாத வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கை அழகானது. ஆனால் திருமண வாழ்க்கையில் குழந்தைகள் இல்லாமல் போவது கூட அழகானது தான். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள வேண்டும்.
மருத்துவர் உங்களால் குழந்தை பெற முடியாது என்று கூறியவுடன் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை. முதலில் அந்த உண்மையை புரிந்து கொள்ள சற்று சிரமமாக தான் இருக்கும். அடுத்தது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம்.
இது சற்று பெரிய பிரச்சனை தான். உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்காக வாழுங்கள். இங்கே எப்படி உங்கள் வாழ்க்கையை மற்றவர் கண்டு வியக்கும் படி மாற்றிக்கொள்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
#1
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் சோகத்தை வெளியேற்றுங்கள். உங்கள் துணையிடம் பேசி உங்களுக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஆதரவின்றி இருக்கும் ஒரு குழந்தைக்கு தாய் தந்தை பாசம் கிடைக்கும். உங்களுக்கும் பிள்ளை பாசம் கிடைக்கும்.
#2
உங்களது சேமிப்பு தொகையை பயன்படுத்தி வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள். புது புது இடங்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களை சந்திப்பதன் மூலம் உங்களது மனதில் உள்ள சோகங்கள் மறையும்.
#3
செல்ல பிராணிகளை வளர்த்துங்கள். அவை உங்களிடம் குழந்தையை போல பாசமாக நடந்து கொள்ளும். நாய், பூனை, கிளிகள் ஆகியவற்றை வளர்பதன் மூலம் உங்கள் வீடு குதுகலமாக இருக்கும்.
#4
உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் காய்கறிகள், பூக்கள் என சில செடிகளை வளர்பதன் மூலம் உங்களது மனம் லேசாகும். இது உங்களது குழந்தை வளர்வதை போல கொஞ்சம் கொஞ்சமாக வளர்வது மனதிற்கு இதமாக இருக்கும்.
#5
உங்களது வாழ்க்கையில் அடைய விரும்பும் இடத்தை அடைய போராடுவதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இதனால் உங்களுக்கு பெயர், புகழ், பணம் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக தனிமை உணர்வு குறையும்.
#6
விளையாட்டு தனமான வாழ்க்கை உங்கள் வாழ்வில் உள்ள சோகத்தை போக்கும். உங்களது பொழுதுபோக்குகள், சமையல் கற்றுக்கொள்வது, எழுதுவது, பிடித்த புத்தகத்தை படிப்பது என உங்கள் நேரத்தை உங்கள் துணையுடன் சேர்ந்து கழியுங்கள்.
#7
இறை நம்பிக்கை ஒருவரது மனதை அமைதியாக மாற்றும். இது உங்களது சோகங்களை போக்கி மனதை ஒருநிலைப்படுத்தும். உங்கள் துணைக்கும் இறை நம்பிக்கை இருந்தால், இருவரும் சேர்ந்து கோவில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.