Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
எத்தனை பேரிடம் இந்த நல்லுள்ளம் இருக்கும்? இப்படி திருமணம் செய்தால் உலகே வாழ்த்துமே!
சமுதாயத்தில் பின்தங்கிய 500 குழந்தைகளை விருந்தினராய் அழைத்து திருமணம் செய்துக் கொண்ட அற்புதமான தம்பதியர்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான தருணம். ஒரு கூட்டில் இருந்து புதிய கூட்டுக்குள் பிள்ளைகள் காலடி எடுத்து வைப்பது போன்றது.
அது ஒரு தனி உலகம். அதை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம், எப்படி துவங்குகிறோம் என்பதில் தான், அது சொர்கமா, நரகமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலும் திருமணங்கள் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடக்கும். ஒருசிலர் மட்டும் சட்டதிட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்களை உடைத்து தங்களுக்கு பிடித்தபடி திருமணம் செய்துக் கொள்வார்கள்.
அப்படி ஒரு திருமணம் தான் இது...ஒரு அற்புத திருமணம்...

பெங்களூர் தம்பதி!
பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணத்தில் உணவிலும், ஆடம்பரத்திலும் செலவு செய்வதை விட, ஏழை குழந்தைகளை மகிழ்விக்க அந்த பணத்தை செலவு செய்யலாம் என தீர்மானம் செய்தனர்.
Image Source

அக்டோபர் 23, 2016!
திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுரபி ஃபேஸ்புக் லைவ்-ல் தோன்றி, தனது திருமணத்தை பற்றியும், புதிய முயற்சியை பற்றியும் அறிவித்தார். மேலும், இந்த முயற்சிக்கு உதவவும், தன்னார்வம் உள்ளவர்களையும் தங்களுடன் இனைந்து பணிபுரிய கேட்டுக் கொண்டார். இதற்கான படிவத்தை கூகுல் ஃபாரம்-ல் உருவாக்கினார்.
Image Source

சேகரிப்பு!
உதவியற்ற ஏழை குழந்தைகளுக்கு நன்கொடையாக, பரிசுகளாக, புத்தகங்கள், உடைகள், இனிப்புகள் என பல வகைகளில் பொருட்கள் வந்து சேர்ந்தன. இவர்களுடன் சமர்த்தனம் என்ற அறக்கட்டளையும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
Image Source

500 குழந்தைகள்!
திட்டமிட்டப்படி சுரபியின் திருமணத்தின் போது விருந்தினர்களாக 500 குழந்தைகள் வந்தனர். அவர்களுக்கு திருமண நாளான் நவம்பர் 6, 2016 அன்று விளையாட்டு போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்சிகள், என பல கேளிக்கை போட்டிகள் நடத்தப்பட்டன. அது அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

மகிழ்ந்த தம்பதி!
கேளிக்கை என்று மட்டுமின்றி, வந்த குழந்தைகளுக்கு மனதார உணவும் இட்டு மகிழ்ந்தனர் இந்த அற்புத தம்பதியினர். திருமணத்திற்கு பிறகு இது குறித்து சுரபி முகநூல் பதிவும் செய்திருந்தார். அதில் தனது கனவு நினைவானதற்கு மகிழ்ந்ததாக கூறியிருந்தார்.
பலரும் இவர்களை மனமார வாழ்த்தி கருத்து கூறியிருந்தனர்.



Click it and Unblock the Notifications