Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
திருமண பந்தத்தில் பகிர்ந்துக் கொள்ள கடினமான விஷயங்கள்!!
நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெற்றோரிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவன நண்பர்களிடம் கூற முடியாது, நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளும் சில விஷயம் மனைவியிடம் கூற முடியாது, மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவற்றை யாரிடமும் கூற முடியாது, இதுதான் வாழ்க்கை.
அந்த வகையில் திருமணமான புதியதில் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ள முடியாத, அல்லது தயங்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. சொல்லப் போனால், இவற்றை பகிர்ந்துக் கொள்ள சற்று கடினமாக கூட இருக்கும். அவை என்னென்ன, அவற்றில் இருக்கும் கடினங்கள் என்ன என்று இனிப் பார்க்கலாம்....

தலைமை
முன்பு ஆண் தான் வீட்டின் குடும்ப தலைவர் என்று எழுதப்படாத சட்டமாக இருந்தது. அன்று ஆண் மட்டும் தான் வெளியே சென்று உழைத்து வந்தான், சம்பாதித்தான். ஆனால், இன்று அப்படி இல்லை, இருவரும் உழைத்து சம்பாதிக்கின்றனர். இந்த நேரத்தில் ஊதியம், பதவி போன்றவை குறிக்கிட்டு இந்த வீட்டு தலைமைக்கு அவ்வப்போது பங்கமாகும். கணவன், மனைவி இதை பெரிதுபடுத்தாமல் இருந்தாலும், சமூகம் சும்மா இருப்பதில்லை.

படுக்கை
என்ன தான் மனதில் ஆசைகள் சிறகடித்தாலும் திருமணமான புதியதில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் போது சிறு சங்கோஜம் இருக்க தான் செய்யும். இதை யாராலும் மறுக்க முடியாது.

பொருளாதாரம்
யார் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற கணக்கு வந்துவிட்டால் வீடு ரெண்டுப்பட்டு போய்விடும். இதனாலேயே பல வீடுகளில் தாங்கள் செய்யும் செலவுகளை வீட்டில் பகிர்ந்துக் கொள்வதில்லை.

கனவுகள், லட்சியம்
இல்லறத்தில் இணைந்துவிட்டால் அனைத்தையும் பகிர்ந்து தான் ஆக வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், சிலவற்றை இழக்கவும் வேண்டும். ஆம், ஆனால் அதில் கனவுகள், இலட்சியம் போன்றவற்றை இழப்பது கடினமானது.

அலமாரி
திருமணம் செய்த புதியதில் மட்டமல்ல, பேரன் எடுத்துவிட்டாலும் கூட, பெண்கள் அலமாரியில் ஆண்களின் துணியை வைக்க இடம் தரமாட்டார்கள். இது அனைவருக்கும் பொருந்தும். திருமணமானவர்களுக்கு மட்டுமே தெரியும் இது எம்புட்டு கடுப்பான விஷயம் என்று!!!

நேரம்
ஆரம்பத்தில் நேரம் ஒதுக்க ஆசை இருக்கும், கொஞ்சம் நாட்கள் கழித்து, நாமாக கட்டாயத்தின் பேரில் நேரம் ஒதுக்குவோம். போக போக, இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டுமா? என்ற எண்ணம் பிறக்கும். இதற்கு இந்த காலத்து வேலை முறையும் ஓர் காரணமாக இருக்கிறது, ஷிபிட் முறையில் வேலைக்கு செல்வோர் எப்படி நேரம் ஒதுக்க முடியும்? பகிர்ந்துக் கொள்ள முடியும்? சற்று கடினம் தான்.



Click it and Unblock the Notifications
