Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
மணமகனிடம் பெண் வீட்டார் எதிர்பார்ப்பவை - இதுக்கு பேரு வரதட்சணை இல்லையா?
முதலில் வரதட்சணை என்பது பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் முன்னர் மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு செல்வம், பொருள் கொடுத்து அழைத்து வருவதாக தான் இருந்தது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. காலப் போக்கில் இது மருவி, பெண் வீட்டார் மணமகனுக்கு தருவது போன்று மாறிவிட்டது.
உண்மையில் வரதட்சணை கொடுப்பது என்பது ஒரு வகையிலான குற்ற செயல் தான். எதிர்பார்ப்பதும் தவறு, தருவதும் தவறு. மணமகன் வீட்டார் தான் வரதட்சணை எதிர்பார்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், உண்மையில் பெண் வீட்டார் எதிர்பார்ப்பது தான் அதிகம். அதைப்பற்றி இனிக் காண்போம்....

அரசாங்க வேலை
மணமகன் நிலையான வேலையில் இருக்க வேண்டும். அதிலும் போனஸ், ஊதிய உயர்வு வருடா வருடம் கிடைப்பது போன்று இருக்க வேண்டும். அரசாங்க வேலை, ஐ.டி வேலை என்றால் முன்னுரிமை. இது திருமணமா அல்ல வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா?

வெளிநாடு போகும் வாய்ப்பு
பெரும்பாலும் ஐ.டி வாலிபர்களை தேடித் பிடிப்பதே எப்படியாவது அவன் வெளிநாடு சென்றுவிடுவான் என்பதற்காக தான். இதுவும் ஓர் காரணம். வெளி ஆட்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் அல்லவா, "பையன் வெளிநாடு போகப் போறான் தெரியுமா.." என்று.

வீடு
மிகவும் முக்கியமாக, சொந்த வீடு இருக்க வேண்டும். இல்லையேல் வேண்டாம். சரி, திருமணத்தின் போது சொந்த வீடு வைத்திருப்பவன், ஏதோ கால சூழ்நிலை காரணமாக அதை விற்கும் நிலை ஏற்பட்டால், விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவீர்களா?

கார்
பைக் எல்லாம் கூட வேண்டாம் கார் தான் வேண்டும். "அதுக்கு நீங்கள் மாருதி கம்பெனி ஒனரதான் கட்டிக்கணும்..." திருமணத்திற்கு பார்க்கும் ஆண் மகன் நல்ல வேலையில் இருந்தால் போதாதா? திருமணத்தின் போதே அவன் பேரன், கொள்ளுப்பேரன் போன்றவர்களுக்கும் சேர்த்து சம்பாதித்து வைத்திருக்க வேண்டுமா?

தனிக் குடித்தனம்
பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, தனிக் குடித்தனம். இந்த எதிர்பார்ப்புக்கு எல்லாம் வரதட்சணை என்று பெயரில்லையா?

அக்கா, தங்கை கூடாது
அப்பா, அம்மா உடன் இருக்க கூடாது, உடன் பிறப்புகள் இல்லாத மணமகன் தேவை. இருவர் மட்டும் தனியே இருப்பதற்கு பெயர் எப்படி குடும்பம் ஆகும்.

பிஸியாக இருக்க வேண்டும்
நல்ல, ஊதியம், ஆன்சைட் வாய்ப்பு, கை நிறைய சம்பளம், பதவி உயர்வு என பிஸியாக இருக்க வேண்டும். மேலும் இவர்களுடனும் வீட்டில் தினமும் அதிக நேரம் செலவிட வேண்டும். இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, இதை அந்த பிரம்மன், சிவனால் கூட இந்த கலியுகத்தில் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.



Click it and Unblock the Notifications