உடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா?

ஆண்களைப் பொறுத்தவரை கலவியில் ஈடுபடும்போது அவர்கள் மனதில் வெவ்வேறு விஷயங்கள் எழும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

ஆண், பெண் உறவை முழுமையாக்குவது என்றால் அது அவர்களுக்கு இடையே ஏற்படும் உடல்ரீதியான நெருக்கம்தான். ஆண், பெண் இருவருமே உடலுறவில் நாட்டம் கொண்டவர்களாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கலவியில் ஈடுபடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். ஆனால் கலவியின் போது அவர்கள் அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

Things Men Think About During Sex

குறிப்பாக ஆண்களைப் பொறுத்தவரை கலவியில் ஈடுபடும்போது அவர்கள் மனதில் வெவ்வேறு விஷயங்கள் எழும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆண்கள் பெரும்பாலும் கலவியின் போது எதைபற்றியெல்லாம் நினைக்கிறார்கள் என்ற சிலவற்றை பாலியல் நிபுணர்கள் கண்டறிந்ததுள்ளார்கள். இந்த பதிவில் உடலுறவின் போது ஆண்கள் எதைப்பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் அவர்களுக்குள் எழும் கேள்விகள் என்னவென்று என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் மீது வாசனை வருகிறதா?

என் மீது வாசனை வருகிறதா?

இது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். பெரும்பாலான ஆண்கள் கலவியின் போது தங்கள் உடலில் இருந்து வெளிவரும் வாசனையைப் பற்றி அதிக அக்கறை கொள்கிறார்கள். தங்கள் உடலில் இருந்து அதிக வியர்வை வெளிவருகிறதா என்பதை கவனிப்பார்கள். மேலும் " என் மீது வாசனை வருகிறதா? " என்ற கேள்வி அவர்களுக்குள் எழும் ஆனால் அதனை கேட்கமாட்டார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியான நேரத்தை கெடுக்க விரும்பாததால் இவர்கள் அதை கேட்கமாட்டார்கள்.

பாடுவது

பாடுவது

பல ஆண்கள் இதை செய்வதாக கூறியுள்ளனர். உடலுறவின் போது ஏன் ஆண்கள் மனதிற்குள் பாடுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு சரியான விளக்கம் என்னவெனில் ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதாக உணரும்போது அதனை திசைதிருப்பவதற்காக இதனை செய்வார்கள். உண்மையில் இது நல்ல பலனை அளிப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள்.

மெதுவாக செயல்பட வேண்டும்

மெதுவாக செயல்பட வேண்டும்

பெண்ணை நிர்வாணமாக பார்க்கும் போது ஆர்வம் காரணமாக ஆண்கள் முன்விளையாட்டுகளில் ஈடுபடாமல் நேரடியாக கலவியில் ஈடுபடுகிறார்கள். எனவே அடுத்தடுத்த முறைகளில் தங்கள் மனதிற்குள் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் என்று ஆண்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 நண்பர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள்?

நண்பர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள்?

சிலசமயம் கலவியின் போது ஆண்கள் சலிப்படையக்கூடும். அந்த சமயத்தில் அவர்கள் மனதில் முதலில் நினைவிற்கு வருவது அவர்களின் நண்பர்கள்தான். அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று சிந்திப்பார்கள். அவர்கள் அதை மனதில் இருந்து வெளியேற்ற முடியாது, அதைப் பற்றி உங்களுக்கு எப்படிச் சொல்வது என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே அவர்கள் நடவடிக்கையைத் தொடர்கிறார்கள், விரைவில் கலவியை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

 துணைக்குப் பிடிக்குமா?

துணைக்குப் பிடிக்குமா?

அனைத்து ஆண்களுக்குமே படுக்கையில் ஒருவித பாதுகாப்பற்ற உணர்வு இருக்கும். அவர்களின் நகர்வுகள் நம்பிக்கையுடனும், சீரானதாகவும் தோன்றினாலும், அவர்களின் செயல்கள் துணைக்குப் பிடிக்குமா என்ற சந்தேகமும், அச்சமும் அவர்களுக்கு இருக்கும். எனவே அவர்கள் புதிதாக எதையும் முயற்சிக்க விரும்பாமல் தங்களின் வழக்கமான செயல்களையே தொடருகிறார்கள்.

சீரற்ற சிந்தனைகள்

சீரற்ற சிந்தனைகள்

பெண்கள் பெரும்பாலும் கலவியின் போது பல்வேறு விதமான சிந்தனைகளில் இருப்பார்கள். அவர்களைப் போலவே ஆண்களும் கால்பந்து, வேலை, நண்பர்கள் என பலவற்றைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற சிந்தனைகள் கடல் அலைகள் போல சில நொடிகளிலேயே மறைந்துவிடும். அதன்பின் அவர்கள் தங்கள் செயலை தொடருவார்கள்.

காண்டம் குறித்த பிரச்சினை

காண்டம் குறித்த பிரச்சினை

ஆண்களுக்கு மட்டுமே ஆணுறையால் ஏற்படும் பிரச்சினைகளை அறிவார்கள். புணர்ச்சியின் போது அது விலகி விட்டதா அல்லது கிழிந்து விட்டதா என்ற சிந்தனை அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதனை உறுதிசெய்து கொள்ளும்வரை அவர்களால் முழுஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. அதேபோல தங்கள் துணை பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் அதனை எடுத்துக் கொண்டார்களா என்று சிந்திப்பார்கள்.

டிவியில் பார்த்த பெண்

டிவியில் பார்த்த பெண்

ஆண்கள் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் பார்த்த அல்லது அவர்களுக்கு பிடித்த பெண்களை நினைப்பார்கள். சிலசமயம் புணர்ச்சி முடியும்வரை கூட அவர்கள் அந்த பெண்களின் நினைவில் இருந்து வெளிவர முடியாது.

 இடையில் நிறுத்த வேண்டும்

இடையில் நிறுத்த வேண்டும்

இது பெரும்பாலும் அனைவரும் நினைக்கும் ஒன்றுதான். அனைத்து ஆண்களுக்குமே நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இருக்கும். எனவே உறவின் போது இடையில் நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக மது அருந்தியிருந்தால் ஆண்களின் பாலியல் செயல்திறன் குறையும். எனவே அதுபோன்ற சமயத்தில் இதனை கண்டிப்பாக நினைப்பார்கள்.

உச்சகட்டத்தை அடைந்தார்களா?

உச்சகட்டத்தை அடைந்தார்களா?

பெரும்பாலான ஆண்கள் தங்கள் துணையின் உச்சக்கட்டத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்கள் உண்மையில் துணையின் உச்சக்கட்டத்தின் மீது அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்களின் உச்சக்கட்டத்தை ஆண்களால் உணர முடியாது, எனவே அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி இந்த கேள்வியை கேட்டுக்கொள்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion