Latest Updates
-
கத்திரிக்காய் வாங்குனா இப்படி சூப்பரா பிரியாணி செஞ்சு பாருங்க - டெஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மே 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் அதிகரிக்கப்போகுது! -
இட்லி உருவான வரலாறு என்ன? இட்லியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
செஃப் தீனாவின் பச்சை சுண்டக்காய் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கேரளா மாம்பழ புளிசேரி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சாதத்தோட சாப்பிட ஜம்முனு இருக்கும் -
சியா விதை Vs சப்ஜா விதை - கோடையில் இவற்றில் சிறந்தது எது? விளக்கும் டாக்டர்! -
மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வச்சிருக்கீங்களா? பணவரவு குறைய இதுதான் முக்கிய காரணமா? -
சாணக்கிய நீதி கூறும் வெற்றிக்கான 3 தாரக மந்திரங்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ஃபாலோ பண்ணுங்க -
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும்
மணிரத்தினம் இயக்கத்தில் இந்த காதல் விஷயங்களை நீங்கள் கவனித்ததுண்டா...
"மௌன ராகம்", "அலைபாயுதே", "ஓ காதல் கண்மணி" என கடந்த மூன்று தலைமுறை காதலியும் கண்ணாடி போல பிரதிபலித்துக் காட்டிய ஒரே இயக்குனர் மணிரத்னம் தான்.
நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன?
"இருவர்", "தளபதி", "பாம்பே" போன்றவை வேறு களமாக இருப்பினும் கூட, அதிலும் காதலின் அழுத்தத்தை காட்டியிருப்பார் மணிரத்னம்.
வார இறுதியில் துணையுடன் சேர்ந்து நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் திரைக்கதை அமைப்பதிலும், அதில் உறவு மற்றும் உணர்வை சரியான விகிதத்தில் சேர்ப்பதிலும் வல்லவர்.
தினமும் காலை இரண்டு நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள் - பொண்டாட்டி சந்தோசத்துக்காக!!
அதிலும், காதல் இவருக்கு கை வந்த கலை. அந்த வகையில் மணிரத்னம் அவர்களது இயக்கத்தில் காட்டப்பட்ட காதல் கண்ணோட்டங்களை பற்றி இனிக் காண்போம்...

எதிர்பாராத நபருடன்
யார், எவரென்று தெரியாத நபருடன், எதிர்பாராத தருணத்தில் கூட காதல் வெளிப்படலாம். கடினமான இதயத்தை கூட அந்த தருணம் உருக வைத்துவிடும். #ராவணன்

உறுதுணை
மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமின்றி, கடினமான தருணங்களிலும் இணைந்து இருப்பது தான் மெய் காதல். #குரு

ஈகோ கடந்தது
உண்மையான காதல் திருமணத்தின் வெற்றி என்பது, ஈகோவை கடந்து வாழ்ந்து காண்பிப்பது தான். #அலைபாயுதே

பிணைப்பு
காதல், ஒன்றாகவே மரணத்தையும் கட்டி தழுவ வைக்கும். எந்த சூழலிலும் உங்கள் காதல் துணையுடன் இணைந்தே இருக்க செய்யும். #உயிரே

மதம்
மதம், கலாசாரம் போன்றவற்றை கடந்தது காதல். இவை காதலுக்கு ஓர் தடையே இல்லை. #பாம்பே

துணிவு
காதல் உங்களுக்கு துணிவை கொடுக்கும். எவ்வளவு கடினமான பயணமாக இருந்தாலும், காதலுக்காக எல்லைகளை கடந்து செல்ல ஊக்குவிக்கும். #ரோஜா

பரிசு
சில சமயங்களில் வலி நிறைந்த பிரிவாக இருப்பினும் கூட, உங்கள் காதலிக்கு நீங்கள் தரும் விலை மதிப்பற்ற பரிசும் அந்த பிரிவு தான். #தளபதி

தோல்வியை கடந்த காதல்
காதல் தோல்விக்கு பிறகு எதுவுமே இல்லை, மரணம் தான் முடிவு என்றில்லை. அதற்கு பிறகும் ஓர் காதல் இருக்கிறது. #மௌன ராகம்

வழியும், வலியும்
வழி காட்டும் போது மட்டுமின்றி, வலி ஏற்படும் போதிலும் கூட இணைந்தே இருப்பது தான் உண்மையான காதல். வெற்றி, தோல்வி இரு வேறுபட்ட தருணத்திலும் இணைந்தே இருக்க வைப்பது தான் காதல். #ஓ காதல் கண்மணி



Click it and Unblock the Notifications