பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!

பெரும்பாலும் நமது நாட்டில் பெண்களையும், பெண்களது உடல் நிலையையும் பற்றி தெரிந்துக் கொள்வதில்லை. அதனால் தான் இன்னமும், ஆண், பெண் குழந்தை பிறப்பிற்கு காரணம் பெண்கள் இல்லை ஆண்கள் தான் என்பதை தெரிந்தும் பல இடங்களில் மறைத்து வருகிறோம், மறுத்து வருகிறோம்.

பெண்மையை புரிய வைத்தாலே நாட்டில் நடக்கும் கற்பழிப்பு குற்றங்களை வெகுவாக குறைத்துவிடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. ஆம், ஆண்களுக்கு ஏற்படும் சுகங்களுக்காக கூட சில வலிகளை பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அநீதி மனித இனத்தில் மட்டுமே இருக்கிறது.

இந்த போக்கினை குறைக்க அல்லது தடுக்கவாவது, பொதுவான பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சியினை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணுறை பெண்களின் உணர்ச்சியை பாதிக்காது

ஆணுறை பெண்களின் உணர்ச்சியை பாதிக்காது

சிலர் ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபட்டால், உறவில் இன்பம் குறையும் ஏற்படும் என்று கருதுகிறார்கள். ஆனால், பெண்களை பொறுத்தவரை, ஆணுறை அணிந்து உடலுறவுக் கொண்டாலும், அணியாமல் உறவுக் கொண்டாலும் ஒரே போன்ற உணர்ச்சி தான் உணர்வார்கள்.

உடல் ரீதியான உறவு இல்லாமலே உணர்ச்சி

உடல் ரீதியான உறவு இல்லாமலே உணர்ச்சி

சில சமயங்களில் பெண்களுக்கு சாதாரணமாக பயணிக்கும் போது, அமர்ந்திருக்கும் போது கூட உணர்ச்சிகள் மேலோங்கும் என்று கூறப்படுகிறது. இரத்த ஓட்டம் மற்றும் பெண்குறி பகுதியில் வைப்ரேஷன் போன்றவை ஏற்படும் போது இவ்வாறு ஆகலாம்.

உச்சமடைவதில் சிக்கல்

உச்சமடைவதில் சிக்கல்

முப்பது சதவீத பெண்களுக்கு உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போதும், பெண்களுக்கு ஏற்பட்ட பிறகும் தான் அதிக உச்சம் காண்கின்றனர். எனவே, ஆண்கள், உடலுறவு கொண்ட பிறகு, பெண்களோடு அணைப்பில் இருக்க வேண்டியது அவசியம். இது தான் அவர்களை உச்சம் அடைய வைக்கும் என்று கூறுகிறார்கள்.

கொஞ்சி விளையாடுதல்

கொஞ்சி விளையாடுதல்

அதே போல, பெண்களுக்கு போர் ப்ளேயில் (ForePlay)ஈடுபடுவது, சில அந்தரங்க தீண்டுதல்கள் தான் உடலுறவு கொள்வதை விட உச்சம் அடைய உதவுகிறது.

இலகுவான தீண்டுதல்கள்

இலகுவான தீண்டுதல்கள்

பெண்கள் பிறவியிலேயே மனதளவிலும், உளவியலும் மென்மையானவர்கள். எனவே, அவர்களை தீண்டும் போது மென்மையாக கையாள வேண்டியது அவசியம். இல்லையேல், உணர்ச்சியை தாண்டிய வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

வயது அதிகம் ஆகும் போது தான் உணர்ச்சி அதிகம் ஆகிறது

வயது அதிகம் ஆகும் போது தான் உணர்ச்சி அதிகம் ஆகிறது

18 முதல் 24 வயதை விட, 30 முதல் 40 வயதில் தான் பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகம் ஆகிறதாம். இருபதுகளில் 60% உச்சம் அடையும் பெண்கள், முப்பதுகளில் 70% வரை உச்சம் அடைகின்றனாறாம்.

வேறுபட்ட முறைகள்

வேறுபட்ட முறைகள்

ஒரே முறை அல்லது வகையில் உறவில் ஈடுபடாமல், வெவ்வேறு முறைகளில் உடலுறவுக் கொள்வது பெண்களின் உணர்ச்சியை அதிகரிக்க செய்கிறதாம்.

பிறப்புறுப்பு பிரச்சனைகள்

பிறப்புறுப்பு பிரச்சனைகள்

வெள்ளைப்போக்கு, பிறப்புறுப்பு பகுதிகளில் அலர்ஜி அல்லது ஏதேனும் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு, அவர்களது மனநிலையின் காரணமாகவே உணர்ச்சி மேலோங்காமல் இருக்கிறதாம். இதற்கு, அவர்களது மனநிலை தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

சுயஇன்பம் காணும் பெண்கள்

சுயஇன்பம் காணும் பெண்கள்

சுயஇன்பதில் உச்சம் காணும் சில பெண்களுக்கு உடலுறவில் அதிக உச்சம் காண இயல முடிவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக சில் பெண்களுக்கு உச்சமும், உணர்ச்சியம் அதிகம் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். இது அவரவர் ஆவல், மற்றும் மனநிலையை பொருத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 24, 2015, 13:37 [IST]
Desktop Bottom Promotion