Just In
- 42 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரு உறவில் நீங்க செய்யும் 'இந்த' விஷயத்தால உங்களுக்கே விரக்தி ஏற்படுமாம்.. அது ஏன் தெரியுமா?
நீங்கள் இதைப் பற்றி நிறைய சிந்திக்கலாம். நீங்கள் தொடர்ந்து மெசேஜ் அனுப்பக்கூடாது. ஏனெனில், நீங்கள் ஒருமுறை அனுப்பிய உரைக்கு பதில் இல்லாதபோது, நீங்கள் முன்பு அனுப்பியதற்கு முற்றிலும் மாறுபட்ட உரையை அனுப்புவீர்கள்.
நம்மில் பலர் நம்பிக்கையற்ற ரொமான்டிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி அவ்வாறு நேசிக்கும் நபரைத் தொடர்ந்து தேடுகிறோம். இதை சாத்தியமாக்க, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறீர்கள். சினிமாவில் வருவது போல நிஜ வாழ்க்கை இருக்காது என்பது புரிந்துகொள்ள வேண்டும். காதலும் இருவரும் விரும்பி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாற்றிக்கொள்ளும்பொது வெளிப்படும். எவ்வாறாயினும், நம்மில் பலர் இன்னும் தனிமையில்தான் இருக்கிறோம். மேலும் பலர் உறவு என்னும் வீட்டுக்குள் போக கதவை தட்டுவதற்காக காத்திருக்கிறார்கள்.
நீங்கள் ஏன் இன்னும் தனியாக இருக்கிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களுக்கே கூட தெரியாமல் மிகவும் அவநம்பிக்கையுடன் செயல்படுகிறீர்களா? தவறான எண்ணத்தை கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் செய்யும் சில விஷயங்கள் உங்களை விரக்தியடையச் செய்யும். இக்கட்டுரையில் உங்களை விரக்தி அடைய செய்யும் செயல்கள் பற்றி காணலாம்.
எப்போதும் இருமுறை சரிபார்க்கும் திட்டங்கள்
ஆம், நீங்கள் ஒரு டேட்டிங்கிற்கு செல்ல உற்சாகமாக இருக்கிறீர்கள். அதேபோல் நீங்கள் இரண்டாவது டேட்டிங்க்கிற்கு செல்வதில் இன்னும் சிலிர்ப்பாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்கிறோம். ஆனால், அதற்காக நீங்கள் தொடர்ந்து டேட்டிங்கிற்கு செல்ல மீண்டும் உறுதிப்படுத்துவீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் நேரத்தை வீணாக்க விரும்பாததால், அந்த நபருடனான உறவு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
MOST READ: 'இந்த' விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணா... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் சந்தோஷமா இருக்குமாம்!
நீங்கள் அடிக்கடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
நீங்கள் முதல் தொடர்பை ஏற்படுத்துவது நல்லது என்றாலும், எப்போதும் நீங்களே மற்றவரை தொடர்பு கொண்டால் அது புத்திசாலித்தனம் அல்ல. அவர்கள் பிஸியாக இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தாலும், அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். அவர்களின் இடத்தில் உங்களை வைத்து நீங்கள் கொடுக்கும் உணர்வை பற்றி சிந்தியுங்கள்.
நீங்கள் எப்போதும் தொடர்பைத் தொடங்குகிறீர்கள்
மற்றவர் உங்களைத் தொடர்புகொள்ள நீங்கள் எப்போதும் காத்திருக்கக் கூடாது. ஆனால் ஒவ்வொரு முறையும் தொடர்பு கொள்ளும் முதல் நபராக நீங்கள் முன்னேற வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அவர்களிடம் பேசுவதற்கு நீங்கள் ஆசைப்படுவது போல் தோன்றுவது மட்டுமல்லாமல், அது உங்கள் மதிப்பை அவர்களிடத்தில் குறைக்கிறது.
திரும்ப திரும்ப உரையை அனுப்புவது
நீங்கள் இதைப் பற்றி நிறைய சிந்திக்கலாம். நீங்கள் தொடர்ந்து மெசேஜ் அனுப்பக்கூடாது. ஏனெனில், நீங்கள் ஒருமுறை அனுப்பிய உரைக்கு பதில் இல்லாதபோது, நீங்கள் முன்பு அனுப்பியதற்கு முற்றிலும் மாறுபட்ட உரையை அனுப்புவீர்கள். அதற்கு பதில் இல்லை. இது ஒரு புத்திசாலித்தனமான வழி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அது உங்களுக்கு விரக்தியை மட்டுமே கொடுக்கும்.
MOST READ: பெண்களே! உங்க கணவன் உடலுறவில் இருமடங்கு இன்பம் பெற உங்களிடம் இதை தான் விரும்புகிறார்களாம்...!
அனைத்து பதிவுகளையும் விரும்புகிறீர்கள்/மறுபதிவு செய்கிறீர்கள்
அவர்களின் சமூக ஊடக சுயவிவரங்களில் அவர்களின் அனைத்து இடுகைகளையும் விரும்புவது அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நீங்கள் பார்ப்பது போல் தோன்றலாம். அதற்கு மேல், நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர்களின் படங்களை பார்ப்பது. இது உங்களின் சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம்.
டேட்டிங் முடிவில் மற்றோரு டேட்டிங்கை முன்பதிவு செய்ய வேண்டாம்
ஒரு அற்புதமான டேட்டிங்கிற்கு பிறகு, நீங்கள் ஒரு நல்ல நேரத்தை அனுபவித்தீர்கள். அவர்களை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் சொல்வது நல்லது. ஆனால் நீங்கள் இந்த டேட்டிங் முடிந்து வெளியேறுவதற்கு முன்பு மற்றோரு டேட்டிங்கை பதிவு செய்வது சரியல்ல. இது உங்களுக்கு கொஞ்சம் ஆர்வமாக கூடுதலாக இருக்கும் என்பதை காட்டுகிறது.
நீங்கள் நிறைய தகவல்களை கொடுக்கிறீர்கள்
உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் எல்லாவற்றையும் நீங்கள் விரைவாகக் கூறுவது, நீங்கள் அதிகமாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. இது ஒருவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கான உற்சாகத்தை நீக்குகிறது மற்றும் ஒரு நபராக நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்த உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த நடத்தை உங்கள் நேரத்திற்கு கூட மதிப்பு இல்லாத ஒவ்வொரு நபருக்கும் உங்களை விட்டுக்கொடுக்க வைக்கிறது.