Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ஆண்களை கடுப்படிக்க, பெண்கள் செய்யும் 10 விஷமத்தனங்கள்!
ஆண்களை காத்திருக்க வைக்க, பெண்கள் வேண்டுமென்றே செய்யும் விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்து இன்று வரை ஆண்களை காக்க வைத்து அதில், இன்பம் காணாத பெண்களே இல்லை. அப்படி எல்லாம் காதலி என்னை காக்க வைக்க மாட்டார் என்றால், நீங்கள் கொடுத்த வைத்த மகராசன் என்று அர்த்தம்.
பெரும்பாலும் கிளம்பும் போது மேக்கப் செய்து நேர தாமதம் செய்வது பெண்களின் வழக்கம். ஆனால், செய்திகளுக்கு ரிப்ளை செய்வது, கால் செய்யும் போது அட்டன்ட் செய்யாதிருப்பது என இந்த வகையில் கூட பெண்கள் எப்படி எல்லாம் ஆண்களை காக்க வைப்பார்கள் என தெரியுமா?

#1
ஃப்ரீயாக இருந்தாலும், உடனே கால் அட்டன்ட் செய்ய மாட்டார்கள். ஓரிரு முறை மிஸ்டு கால் வந்தவுடன் தான் எடுத்து பேசுவார்கள். அல்லது "Call Me.." என செய்தி அனுப்புவார்கள்.

#2
என்ன கேள்வி கேட்டாலும், அதற்கு தெளிவான, விரிவான விளக்கமோ, பதிலோ அளிக்காமல், மணிரத்தினம் வசனம் போல ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து கடுப்பேற்றுவார்கள்.

#3
மெசேஜ் பார்த்தாலும் உடனே ரிப்ளை செய்யக் கூடாது. முதல் மெசேஜ்க்கு ஓரிரு மணி நேரமும், அடுத்ததடுத்த மெசேஜ்களுக்கு பத்து நிமிடங்களாக நேரம் எடுத்துக் கொண்டு ஆண்களை காக்க வைப்பதை பெண்கள் தங்கள் குல தொழிலாவே செய்து வருகின்றனர்.

#4
சாப்பிடும் போது, வேலை செய்யும் போது, டிவி பார்க்கும் போதென ஆண்கள் எப்போதும் டக்கென ரிப்ளை செய்வார்கள். ஆனால், பெண்கள் என்ன அவசரமான விஷயாமாக இருந்தாலும் சற்றே டிலே செய்வதை கொள்கையாக வைத்திருக்கின்றனர்.

#5
தங்களை ஃபாலோ செய்யும் ஆண் என தெரிந்தால், அவர்கள் தங்களை பற்றி சமூக தளங்களில் இருந்து தரவுகள் தெரிந்துக் கொள்ள கூடாது என, பிளாக் செய்துவிடுவார்கள்.
ஆனால், வேறு விதங்களில் தன்னை தேட வேண்டும் என சிந்திக்கவும் செய்வார்கள்.

#6
உறங்காமல் கொட்ட, கொட்ட விழித்துக் கொண்டிருந்தாலும், லேட் நைட் செய்திகளுக்கு ரிப்ளை செய்ய மாட்டார்கள்.

#7
பிடித்த நபராக இருந்தாலும், தானாக ஃபிரென்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்பவே மாட்டார்கள். நாமாக அனுப்பினாலும் உடனே அக்ஸப்ட் செய்ய மாட்டார்கள்.

#8
நீங்கள் செய்தி வாயிலாக கூறிய விஷயம் ஒன்று பிடித்து, வயிறு குலுங்க சிரித்தாலும், அதை ஸ்மைலிகள் மூலம் தெரியப்படுத்தாமல். சின்ன குட்டி ஸ்மைலி போட்டு காண்டு ஏத்துவார்கள்.

#9
உங்களுடன் 24x7 உடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை வெளிப்படுத்த மாட்டார்கள். நீங்களாக அழைத்தால் மட்டுமே உடன் வருவார்கள்.

#10
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நீங்கள் அவர்களை வெளியே அழைத்தாலும் சரி, அவர்களே உங்களை வெளியே அழைத்தாலும் சரி... கூறிய நேரத்திற்கு இடத்திற்கு வராமல் ஆண்களை காக்க வைப்பதில் பெண்கள் அலாதி இன்பம் காண்கின்றனர்.



Click it and Unblock the Notifications











