Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை ஆதரிக்க சில வழிகள்!!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளிடம் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். ஆனால், பிள்ளைகளாகிய நாம் பெற்றோர்களுக்கு வயதானவுடன் அவர்களை எதிரிகளாகவே பார்க்கின்றோம். நமது சிறுவயதில் நமக்காக நம் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும். பெற்றோர்களுக்கு வயதாகும்போது அவர்களுக்கு நமது அன்பையும் ஆதரவையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அல்சைமர் என்பது மனநோயில் ஒரு வகை நோயாகும். மூளை குறைபாடு ஏற்படுத்தும் இந்த நோய்க்கு இந்நாள் வரை தீர்வு ஒன்றும் கிடையாது. வயது மற்றும் மன அழுத்தம் இவை இரண்டும் தான் அல்சைமர் நோயின் முதல் அறிகுறிகளாகும். ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், பேசுவதில் கடினம் ஏற்படுவது போன்றவை மற்ற அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களுக்கு கடினமான காலமாகவே இருக்கும்.
பெற்றோர்கள் மற்றுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் பல மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்நாட்களில் பெரும்பாலானோர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதான பெற்றோர்கள் பெரும் அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெற்றோர்களை பார்த்துக் கொள்வது பிள்ளைகளுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. அவர்கள் தன் சொந்த வாழ்வில் உள்ள பொறுப்புகளோடு இவர்களையும் சமாளிக்க வேண்டும்.
எல்லா பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் போது பெற்றோர்கள் உடனிருப்பார்கள். அதனால், இப்பொழுது அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவர்களை ஆதரிப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். உங்களின் குடும்ப சூழ்நிலைகளாலும், வேலை காரணமாகவும், அல்சைமர் நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் சில சந்தர்ப்பங்களில் உங்கள் பெற்றோரை நர்ஸ்களின் ஆதரவில் விட நேரிடும். அப்படி நேர்ந்தாலும், அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க நீங்கள் அவர்களோடு இருக்க வேண்டும்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை பராமரிக்க எந்த டிப்ஸூம் தேவை இல்லை. ஆனால், இவை அனைத்தும் அவர்களின் சந்தர்ப்பங்களை நீங்கள் புரிந்து கொள்ள உதவி புரியும்.

அன்பு
நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்களுக்கு இந்த அன்பு அதிகம் தேவைப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் உங்கள் பெற்றோர்கள் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அளித்திருப்பார்கள். இதனை கவனத்தில் கொண்டு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சுமையாக பார்க்காமல் உங்கள் அன்பின் மூலமாக ஆதரிக்க வேண்டும். உங்கள் அன்பு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தி கடினமான நேரங்களில் சந்தோஷத்தை அளிக்கும்.

பொறுமை
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை ஆதரிக்க உங்களுக்கு வேண்டியது பொறுமை மட்டுமே. பொறுமை மிகவும் அவசியமான ஒன்றாகும். சில நேரங்களில் அவர்களிடம் நீங்கள் கோபம் கொள்ள நேரிடும். அவர்களின் ஞாபக மறதி மற்றும் குழந்தைத்தனமான காரியங்கள் உங்களுக்கு எரிச்சலூட்டச் செய்யும். ஆனால், அவர்களிடம் அதை காண்பிக்ககூடாது. சில நேரங்களில் அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போகக்கூட நேரிடும். அதனால், நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து உங்கள் அன்பாலும் ஆதரவாலும் அவர்களை கையாள வேண்டும்.

வலிமையான இதயம்
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்ளுவது என்பது எளிதான காரியம் அல்ல. சில கடினமான நேரங்களில் அவர்களுக்கு கோபம் ஏற்படக்கூடும், மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும், உங்கள் பற்றி எதுவுமே ஞாபகத்தில் இல்லாமல் போய்விடக்கூடும். மேலும் சில நேரங்களில் முரட்டுத்தனமான நடந்துகொள்ள நேரிடும். இந்த சந்தர்ப்பங்களை சந்திக்க உங்களுக்கு வலிமையான இதயமும் எதார்த்தமான மனமும் வேண்டும்.உங்கள் பெற்றோரை இந்த நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும். ஆனால், இந்த வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

அவர்களோடு இருக்க வேண்டும்
உங்கள் பெற்றோர்களை பார்த்து கொள்ள நர்ஸ் இருந்தாலும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இருக்கும் தருணங்களை தவற விடக்கூடாது. அவர்களை சென்று பார்ப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் ஞாபகங்களுக்கு நீங்கள் மட்டும் தான் சொத்து. நீங்கள் அவர்களோடு இருக்கவிட்டால் உங்கள் பற்றிய ஞாபகங்கள் நாளடைவில் மறந்து போய்விடும்.

சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
நீங்கள் எப்பொழும் போல அவர்களோடு பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மறந்து போய்விட்டாலும் நீங்கள் அவர்களை பார்த்து புன்னகை செய்ய வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான பூக்கள் மற்றும் சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். அவர்களை சந்தோஷமாக வைப்பதன் மூலமாக மீதி இருக்கும் சில வருடங்களில் சந்தோஷமாக இருக்கச் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











