Latest Updates
-
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்!
பெற்றோர்களுக்கு சிறந்த மகனாக இருப்பதற்கான 10 சிறந்த வழிகள்!!!
'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பது வள்ளுவர் வாய்மொழி. தன்னுடைய மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதே ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகவும் இருக்கும் என்பது தான் இதன் வெளிப்படையான பொருள். அன்னையின் வயிற்றில் சிறு துளியாக உதித்த பொழுதிலிருந்தே, உங்கள் மேல் அவர்கள் பொழிந்த அளவற்ற அன்பையும், பாசத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டியது மகனாகப் பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கருவாக உருவான நாளிலிருந்தே பெற்றோர்கள் உங்களை கவனிக்கத் தொடங்கி விடுகிறார்கள். உங்களுக்காக அவர்களுடைய ஓய்வு நேரங்கள், தூக்கம் மற்றும் சுகங்கள் என பலவற்றையும் அவர்கள் தியாகம் செய்திருப்பார்கள்.
சிறந்த மகனாக இருப்பதை அவர்களுக்கு செய்யும் கடமையாகவோ, கடனை திரும்ப அடைக்கும் செயலாகவோ கூட நினைக்க யாருக்கும் அருகதை இல்லை என்பது மிகவும் முக்கியமான விஷமாகும். சிறந்த மகனாக இருப்பது வழக்கம் போல் ஒரு வேலையல்ல, அது ஒரு வாழ்வு முறை. இதன் மூலம் உங்களுடைய குழந்தைகளும் சிறந்தவர்களாக இருக்கும் வகையில் நீங்கள் வழி நடத்த முடியும். ஏனெனில், குழந்தைகள் பெற்றோர்களின் பிரதிகள் தான்.
தன்னலம் பார்க்காமல் அவர்கள் பாசத்தைப் பொழிந்தது போல, நீங்களும் அவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டியது தான் சிறந்த மகனாக இருக்க தொடங்கும் முதல் வழியாகும். உண்மையான அன்பின் மூலம் மரியாதையும், சுயநலமற்ற செயல்களும் வெளிப்படும். பெற்றோர்களுக்கு நீங்கள் தேவைப்படும் நேரத்தில், அவர்கள் அருகில் நீங்கள் இருப்பதை வைத்தே, நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை காட்டி விடும். இதில் நீங்கள் பொருட்களையோ, பணத்தையோ கொடுத்து அடையக் கூடியது எதுவுமில்லை. இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு உங்கள் கையால் ஒரு வேளை சாப்பாடு போட பாசத்துடன் அழைத்துச் செல்வது சிறந்த செயலாக இருக்கும்.

அன்பு செலுத்துங்கள்
சிறந்த மகனாக இருக்க, பெற்றோர்கள் மேல் நீங்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்று காட்டுவதன் மூலம் தெரியப்படுத்த முடியும். சிறந்த மகனாக இருப்பதில் மிகவும் அடிப்படையான விஷயம் இதுதான். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.

பொறுப்பான மனிதராக இருக்கவும்
சிறந்த மகனாக இருப்பவர் தன்னையும், தன் குடும்பத்தையும் சரி வர கவனித்துக் கொள்ளும் பொறுப்பான மனிதராக இருப்பார். இதன் மூலம் உங்களால் சொந்தக் கால்களில் நிற்க முடியும் மற்றும் பெற்றோர்கள் இல்லாமலேயே எதையும் சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கையை, திருப்தியை பெற்றோர்களுக்கு தர முடியும்.

மற்றவர்களை மதித்து நடத்தல்
சிறந்த மகனாக இருக்க உதவும் முக்கியமான செயல்களில் ஒன்றாக மற்றவர்களை மதித்து நடப்பது என்பது உள்ளது. நீங்கள் உங்கள் பெற்றோர்களை மதிப்பது போலவே, ஆசிரியர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மரியாதை அளிப்பதன் மூலமாக சிறந்த மகனாக பரிணாமம் எடுக்க முடியும்.

நன்றாக படியுங்கள்
இளம் வயதிலிருந்தே நீங்கள் நன்றாக படிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி வர கல்வி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒழுக்கமுடைய, கற்ற மகனே சிறந்த மகன்.

நேர்மையாளன்
உங்களுடைய பெற்றோர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். நாம் அனைவுரம் தவறு செய்வோம், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதும், உண்மையான பெரிய மனிதரைப் போல நடந்து கொள்வதும் தான் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் சிறந்த மகனின் குணாதிசயம் ஆகும்.

சகோதரர்களிடம் அன்பும், பாசமும் காட்டுதல்
உங்களுடைய பெற்றோருக்கு மட்டும் நல்ல பெயர் வாங்கி விட்டால் சிறந்த மகனாக ஆகிவிட முடியாது. சிறந்த மகனாக இருப்பவர் தன்னுடைய சகோதரர்களை மதிக்கவும், அவர்களிடம் அன்பு-பாசத்துடன் நடந்து கொள்ளவும் வேண்டும்.

பாதை மாறாதே!
நமக்கு வயது ஏற ஏற நம் வாழ்க்கைப் பாதையில் வழி மாறிச் செல்லும் நிலைகளும் வரும். அதனால் குற்றங்கள் செய்தல், சூதாடுதல் மற்றும் பிற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோம். எனவே, சிறந்த மகனாக இருக்க விரும்புபவர்கள் இந்த தவறான பாதைகளில் இருந்து எந்த நிலையிலும் விலகியே இருக்க வேண்டும்.

போதைக்கு அடிமையாக வேண்டாம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து அவ்வப்போது மது அருந்துவது தவறான விஷயமாக கருதப்படுவதில்லை ஆனால் அதே போதை மருந்துகளுக்கு நீங்கள் அடிமையானால் உங்கள் பெற்றோர்களை விட யாரும் அதிகம் வருந்தப் போவதில்லை. எனவே, நம்மை அடிமையாக்கி விடும் போதைப் பொருட்களிடமிருந்து நாம் விலகி இருந்தால் கூட சிறந்த மகன் என்ற அருகதையை பெற முடியும்.

நான் இருக்கிறேன்
எந்தவொரு தேவையும் இல்லாமல் நீங்கள் தங்களருகில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவதில்லை. எனவே, அவர்களுக்கு உண்மையிலேயே தேவையான நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அருகில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு நீங்கள் அருகில் இருந்து சொல்வதன் அர்த்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

சிறந்த மனிதராக இருங்கள்
கடைசியாக, சிறந்த மகனாக இருக்க வேண்டுமெனில் நீங்கள் சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடையே பெற்றோர்களையே எந்த விஷயங்களிலும் பிரதிபலிப்பார்கள். எனவே, உங்களுடைய பெற்றோர்களை நீங்கள் மகிழ்விக்க வேண்டுமெனில், அவர்களின் பிரதிபலிப்பான நல்ல மனிதராக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களிடமிருந்து உங்களைப் பற்றி சொல்லப்படும் ஒரு சில நல்ல வார்த்தைகள் கூட அவர்களுக்கு கோடி ரூபாய்க்கும் ஈடாகாத மகிழ்ச்சியைக் கொடுத்து விடும்.



Click it and Unblock the Notifications