Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
நண்பர்கள் தின ஸ்பெஷல் ஸ்டோரி: பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள்!!!
நண்பர்கள் இல்லாதோர் இல்லாதோர், இவ்வுலகில் எவரும் இலர். இந்த உலகில் உள்ள மிகவும் புனிதமான ஒரு உறவு தான் நண்பர்கள். இத்தகைய நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் அமைவார்கள். ஆனால் சிறு வயதில், அதிலும் பள்ளியில் படிக்கும் போது வரும் நண்பர்கள் என்றுமே மறக்க முடியாத நண்பர்களாகளே மனதில் இருப்பார்கள். பள்ளிக்கு பிறகு காலேஜில் எத்தனை நண்பர்கள் கிடைத்தாலும், இவர்களுக்கு நிகர் எவரும் இருக்க முடியாது.
இதற்கு காரணம் பல இருக்கலாம். ஏனெனில் சிறு வயதில் அனைவருமே பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யக்கூடாத அட்டகாசங்களை செய்து, ஆசிரியரிடம் பல அடிகளை வாங்கியிருப்போம். மேலும் டெஸ்ட் என்று வந்தால், புத்தகத்தை எடுத்து படிக்கிறோமோ இல்லையோ, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு பிட் அடித்திருப்போம். அதுமட்டுமின்றி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, தூக்கம் வந்தால், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பெஞ்ச்சுக்கு அடியில் எத்தனை பேர் படுத்திருப்போம். இத்தகைய சேட்டைகள் அனைத்தும் காலேஜ் வருடங்களான 2-3 வருடங்கள் மட்டுமா நடந்திருக்கும். இல்லை, இவை அனைத்தும் 12 வருட கால நிகழ்வுகள்.

அதுமட்டுமல்லாமல், பள்ளிப் பருவத்தில் கோபத்தினால் அடிக்கடி நண்பர்களுடன் சண்டைகள் போட்டுக் கொள்வோம். அதிலும் அவை அனைத்து சிறு காரணங்களாக இருக்கும். அப்போது ஈகோ என்ற ஒன்று அறவே இருக்காது. மேலும் எதையும் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொள்ளுமாறும் சண்டைகள் இருக்காது. அதிலும் அத்தகைய சண்டைகளை இன்று நினைத்தாலும், அந்த நண்பர்கள் மீது கோபம் வராது, மனதில் ஒருவித ஆனந்த புன்னகை மற்றும் மீண்டும் அவர்களைப் பார்த்தால், அந்த சிறு காரணத்திற்காக சிறு செல்ல சண்டைகள் போட வேண்டுமென்று தோன்றும்.
ஒரு சிலர் சிறுவயதில் அவ்வப்போது பள்ளிகளை மாற்றினாலும், அத்தகையவர்களுக்கும் மேற்கூறிய பள்ளிப் பருவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்திருக்கும். சொல்லப்போனால், அத்தகையவர்களுக்குத் தான் இன்னும் நிறைய நண்பர்கள் மறக்க முடியாதவர்களாய் இருப்பார்கள்.
இதுப்போன்று பள்ளிப் பருவத்தில் கிடைத்த நண்பர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளை படிக்கும் போது, நிச்சயம் அனைவருக்கும் அவரவர்களது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் செய்த சேட்டைகள் அனைத்தும் ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன். என்ன நண்பர்களே சரிதானே!
சரி, நீங்கள் பள்ளிப் பருவத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, என்றும் மறக்க முடியாதவாறு செய்த சேட்டையை எங்களுடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!



Click it and Unblock the Notifications











