Latest Updates
-
கோடை வெயிலால் அவதியா? இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வையுங்க… குளிர்ச்சியும் பணவரவும் தானாக தேடி வரும்! -
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க.. -
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்! -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பெண் குழந்தைகளை பெறுவதால், தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்!!!
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தைக்குப் பெற்றோர் என்பது வாழ்வில் மிகவும் அற்புதமானதொரு பயணமாகும். ஒரு பெண் எப்பொழுது முழுமையடைகிறாள் என்றால், அவள் தன் குழந்தைக்குத் தாயாகும் பொழுது தான். தாய்மை அடைதல் என்பது ஒரு பெண்ணுக்குள் உண்டாகும் அளவிட முடியாத ஆனந்த அனுபவமாகும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண்ணாக இருந்தாலும், எவ்வித நெருடலுமின்றி வாரி அணைத்துக் கொள்பவள் தான் தாய். அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்தி, அல்லும் பகலும் வளர்ப்பாள். தன்னுடல் நோக தன்னை வருத்தி, கண் விழித்து, தன் சுக துக்கம் பாராமல், தன் குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய்க்கு, பிறந்தது ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மகளைப் பெற்றுள்ள அன்னையா நீங்கள்? அப்படியென்றால், பெண்களுக்கான பொழுதுபோக்குகள் மற்றும் உணர்வுப் பரிமாற்றங்களுக்கு வேறு ஒரு தோழியைத் தேட வேண்டிய அவசியமே இராது. பெண் குழந்தை என்பது ஒரு தாய்க்குக் கூடுதல் சாதகமான விஷயம். குழந்தையே அவளுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள். ஒரு தாய்க்கு ஆண்குழந்தையை விட பெண்குழந்தையிடம் தான், அதிக நெருக்கமாக மட்டும் இல்லாமல், ஒரு தோழியாகவும் இருக்க முடியும். இப்போது பெண் குழந்தையைப் பெற்ற ஒரு அன்னையானவள் அடையும் நன்மைகளை இங்கே காணலாம்.

தோழி
தொலைபேசியைத் தேடி எடுத்து தோழியுடன் உரையாட வேண்டிய அவசியமில்லை. மகளையே தோழியாக்கிக் கொண்டு, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். கணவரோ, மகனோ பெண்களின் பேச்சுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் இருந்தாள் நிச்சயமாக உணர்வுகளையும், பேச்சையும் காது கொடுத்துக் கேட்பாள்.

ஓய்வு நேரம்
ஓய்வு நேரத்தை மிகவும் இனிமையாக செலவளிக்கலாம் என்பது ஒரு சாதகமான விஷயம். ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனைத் தயக்கமின்றி செய்யலாம். உதாரணமாக, இருவரும் புதிய வகை உணவுகளைத் தயாரிக்க முயலலாம். அப்போது ஜோக்கடித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருந்தால், நேரம் இனிமையாகக் கழியும். மென்மையான ரொமான்டிக் நகைச்சுவைத் திரைப்படங்களையோ, டிவியில் மெகா சீரியல்களையோ மகளுடன் சேர்ந்து காணலாம்.

ஆர்வங்கள்
தையல், சமையல், அலங்காரம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால், மகளுக்கும் ஆர்வம் இருக்கக்கூடும் அல்லது இவற்றைக் கற்றுக் கொடுக்கலாம். அப்பொழுது தான் இருவரும் அவற்றைப் பற்றி விவாதித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, இருவரும் சேர்ந்து செய்து மகிழ முடியும்.

ஷாப்பிங்
பெண் குழந்தையின் மகத்துவம் ஷாப்பிங் செய்யும் போது தெரியும். பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் செய்யும் போது விலகியே இருப்பார்கள். ஷாப்பிங் செய்வது பெண்களின் வேலை என்று சொல்வார்கள். ஷாப்பிங் செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதை மகளுக்கும் கற்றுக் கொடுங்கள். உங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வாள். பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடைகள், பொருட்களை முகம் சுழிக்காமல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள்.

கருத்துப் பரிமாற்றம்
ஆடைகளிலும், அலங்காரப் பொருள்களிலும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள நவீன ஃபேஷன்கள் குறித்து விவாதித்துத் தெரிந்து கொள்ளலாம். லேட்டஸ்ட்டாக வந்துள்ள டிசைன்கள் மற்றுன் ஃபேஷன்கள் குறித்து, இன்றைய தேதி வரையிலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். புதிதாக வாங்கியுள்ள ஆடைகள் உங்களுக்கு எப்படி இருக்கின்றன, கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உடலுக்கு நன்றாக இருக்கும் எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் வரும் ஒரே பதில் " இந்த ட்ரெஸ்ஸில் நீ மகாராணி போல் இருக்காய்!' என்பதாகத் தான் இருக்கும்.

அலங்கரிப்பு
வெளியிடங்களுக்கு செல்லும் போது, பெண் குழந்தைகள் இருந்தால், தன் அம்மா அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதற்காக மகள் உங்கள் நகத்திற்குப் பாலிஷ் போட்டுவிடுவார்கள். முடிகளைக் கர்லிங் செய்து விடுவார்கள். முகத்திற்கு ஃபேஷியல் போட்டுவிடுவார்கள். மேலும் பல அலங்காரங்களை செய்து விடுவார்கள்.



Click it and Unblock the Notifications