Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?

நிச்சயதார்த்தம் தினத்தன்று திடீரென்று தனியாக பேச வேண்டும் என்று கூறியதும், பதட்ட நிலையில் இருக்கும் பெண்கள் தன்னிடம் என்ன கேட்பார்களோ ஏது பேசுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே ஆண்கள் கேட்கும் கேள்விகள் என்னென்னவென்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
ஆண்கள் அதிகம் கேட்கும் கேள்விகளில் ஒன்று தான், 'சமைக்கத் தெரியுமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு உணவு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன் ஹோட்டலில் தான் அதிகம் சாப்பிட்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் திருமணத்திற்குப் பின்னும் ஹோட்டலில் சாப்பிட விரும்பமாட்டார்கள், தன் மனைவி கையால் வீட்டில் சாப்பிடுவதையே விரும்புவர். ஆகவே நல்லா சமைக்கத் தெரிஞ்சா நீங்க பாஸ் தான்.
அடுத்ததாக கேட்பது, 'என் பெற்றோருடன் சேர்ந்து வாழ விருப்பமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு அவர்கள் பெற்றோர் மீது பாசம் அதிகம். ஆனால் பெண்கள் தன் கணவருடன் பெரும்பாலும் தனியாக இருப்பதையே விரும்புவர். ஏனெனில் அவர்கள் இருந்தால் தமது திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பெண்கள் நினைப்பர். இதை கருத்தில் கொண்டே ஆண்கள் இப்படி கேட்கின்றனர். இதற்கு ஆண்கள் பெரும்பாலும் அனுசரித்து செல்பவரையே விரும்புவர்.
'என்னோட போதிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி விடுவாயா?' என்று கேட்பது. எல்லா ஆண்களுக்கும் தாம் எவ்வளவு சம்பாதித்தாலும், அது அவர்களுக்கு குறைவாகவே தோன்றும். அவர்கள் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்றே இருப்பர். மேலும் எதிர் காலத்தில் சந்தோஷமாக இருக்கவே சேமித்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பர். ஆகவே தனக்கு வருபவளும் தன் வருமானத்தை வைத்து சந்தோஷமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே இந்த கேள்வியை கேட்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
'என்னை அனுசரித்து, வளைந்து கொடுத்து போவாயா?'. குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைய இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏனென்றால் சில பெண்கள் புரிந்து கொள்ளாமல், அனுசரிக்க பிடிக்காமல் பிரிந்து விடுகின்றனர், அதற்காகவே இதை கேட்கிறார்கள். குடும்பத்தில் அனுசரித்து, வளைந்து கொடுத்து சென்றால் தான் வாழ்க்கையானது இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் எனவே பெண்களே இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதிலை சொல்லிவிட்டால் வாழ்க்கைப் பரிச்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்று பாஸ் செய்து விடுவீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications