Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
ஐ லவ் யூ சொல்லி ரொம்ப நாளாச்சா?

உடல் ரீதியான தொடர்புகளை விட உள்ளரீதியான தொடர்புகள் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். கணவருக்காக காத்திருத்தல் ஒரு சுகம்தான். நமக்காக ஒருத்தி வீட்ல காத்திட்டு இருப்பா என்ற எண்ணமே மனைவி மீதான நேசத்தை அதிகரிக்குமாம்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும். அதை செய்யும் போதே அவருக்கு இது பிடிக்குமே என்று பார்த்து பார்த்து செய்தால் உங்களவர் அப்படியே உருகிப்போவார். நீங்கள் செய்யும் சமையலில் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் அப்புறம் அவர் ஹோட்டல் சாப்பாடு பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்.
காதலிக்கும் போது நினைத்த நேரத்தில் எல்லாம் போன் செய்திருப்பீர்கள். எத்தனையோ முறை ஐ லவ் யூ சொல்லியிருப்பீர்கள். அதெல்லாம் திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போயிருக்கும். வீட்டு வேலை, குழந்தை என பிஸியான உடன் கணவர் இரண்டாம் பட்சமாக மாறியிருப்பார். இதுதான் குடும்பத்தில் குழப்பம் வந்து கும்மியடிக்க காரணமாகிவிடும். அதிகமாக வேண்டாம். தினசரி படுக்கை அறையிலாவது காதோரம் போய் ஐ லவ் யூ சொல்லுங்கள். அதிலேயே சரண்டர் ஆகிவிடுவார் உங்கள் கணவர்.
பணி சூழலில் அவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் விட்டது தொல்லை என்று கண்டும் காணாமல் விட்டு விடாதீர்கள். அவ்வப்போது ரொமான்ஸ் மெசேஜ் அனுப்புங்கள். வேலை நேரத்தில் தொந்தரவு செய்ய விரும்பாவிட்டாலும் உணவு இடைவேளை, இரவுப் பொழுதுகளிலாவது செல்பேசியில் பேசலாம். சம்பிரதாயமான பேச்சுக்களை விடுத்து நீங்கள் எவ்வளவு தூரம் அவருக்காக தவிக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
அன்பும், நட்பும் ஆதரவாய் எங்கே கிடைக்கிறதோ அங்கே ஆண்களின் மனம் தடம் மாற வாய்ப்புள்ளது. எனவே நம் கணவர்தானே நம்மை விட்டு எங்கே போய்விடப்போகிறார்? என்று எண்ணாமல் வீட்டுப் பெரியவர்கள் கூறுவதைப் போல கணவரை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே பாதுகாப்பானது.



Click it and Unblock the Notifications