Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள்

வாழ்த்து அட்டையா வேண்டாம்
காதலர் தினத்திற்காக வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுவது தற்போது முக்கிய அம்சமாக உள்ளது. ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று மட்டும் பத்து லட்சம் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஆனால் விக்டோரிய மகாராணி காலத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை பரிசளிக்க தடை உண்டு. ஏனெனில் வாழ்த்து அட்டை பரிமாற்றம் செய்தால் அந்த காதல் வெற்றி பெறாதாம். எனவேதான் வாழ்த்து அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குலுக்கல் முறை தேர்வு
காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.
மனதுக்கு பிடித்தவர்
காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
காதல் புறா
காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காணவேண்டும் என்றுதான் பல பெண்களும் விரும்புபவார்களாம். ஏனெனில் காதலர் தினத்தன்று புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்றும், அமையும் கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பான் என்பதும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் புறா விடு தூது பிரபலமடைந்தது. அதே சமயம் மரங்கொத்தி மட்டும் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்களாம். ஏனெனில் மரங்கொத்தியை கண்டால் காதல் வெற்றி பெறாது என்பது அவர்களின் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் கைக்குட்டையை பரிசளித்தால் அந்த காதல் கைகூடாது என்பது காதலர்களிடையே பரவலான நம்பிக்கையாக உள்ளது.



Click it and Unblock the Notifications











