Latest Updates
-
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்!
காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள்

வாழ்த்து அட்டையா வேண்டாம்
காதலர் தினத்திற்காக வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுவது தற்போது முக்கிய அம்சமாக உள்ளது. ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று மட்டும் பத்து லட்சம் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஆனால் விக்டோரிய மகாராணி காலத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை பரிசளிக்க தடை உண்டு. ஏனெனில் வாழ்த்து அட்டை பரிமாற்றம் செய்தால் அந்த காதல் வெற்றி பெறாதாம். எனவேதான் வாழ்த்து அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குலுக்கல் முறை தேர்வு
காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.
மனதுக்கு பிடித்தவர்
காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
காதல் புறா
காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காணவேண்டும் என்றுதான் பல பெண்களும் விரும்புபவார்களாம். ஏனெனில் காதலர் தினத்தன்று புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்றும், அமையும் கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பான் என்பதும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் புறா விடு தூது பிரபலமடைந்தது. அதே சமயம் மரங்கொத்தி மட்டும் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்களாம். ஏனெனில் மரங்கொத்தியை கண்டால் காதல் வெற்றி பெறாது என்பது அவர்களின் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் கைக்குட்டையை பரிசளித்தால் அந்த காதல் கைகூடாது என்பது காதலர்களிடையே பரவலான நம்பிக்கையாக உள்ளது.



Click it and Unblock the Notifications