Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
காதல் கடிதம்...நடுநடுவே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கணும்!

காதல் உணர்வுகளை கடிதத்தில் கொட்டியாகிவிட்டது. அதை எப்படி, எங்கே கொடுப்பது என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. சாதரணமாக நான்காக மடித்து நீட்டுவதை விட அதையே கிரியேட்டிவாக செய்தால் உங்கள் காதலுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்கின்றனர் காதல் எக்ஸ்பர்ட்கள்.
கண்ணாடி குடுவை, காதல் கடிதம்
அழகான கண்ணாடி குடுவையில் சின்னதாய் ஒரு சிவப்பு ரோஜா அதில் சுருட்டப்பட்ட கடிதம். அதனை மூட இதய சின்னம் வரைந்த கார்க் வைத்து அடைக்கப்பட்ட மூடி, அந்த பாட்டிலை சிவப்பு நிற ரிப்பனால் கட்டி உங்கள் மனங் கவர்ந்தவரிடம் கொடுத்துப் பாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்களவரின் முகம் வெட்கத்தில் சிவக்கும்.
ஒலிப்பதிவு கடிதம்
உருகி உருகி கடிதம் எழுதியிருந்தாலும், ஒலிப்பதிவு நாடாவில் உங்களுடைய குரலை பதிவு செய்து அந்த டேப்பில் உங்கள் கடிதத்தை அழகாக சுற்றி பரிசளிக்கலாம்.
அதோடு மனதிற்கு பிடித்த காதல் பாடல்களை அந்த ஒலிப்பதிவு நாடாவில் பதிந்து அதோடு கடிதத்தை கொடுத்தால் அதற்கு கிடைக்கும்
என்னா மரியாதை, என்னா மரியாதை...
இதயம் கவர்ந்தவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசிப்பதை விட அதிகம் உபயோகிக்கும், அவர்கள் அதிகம் விரும்பும் பொருட்களை நாம் பரிசளித்து நம் காதலை உணர்த்தலாம். குட்டித் தலையணை, அதிகம் தொடும் பேனா, விரல் தொடும் செல்போன் என மனங்கவர்ந்தவர் அதிகம் உபயோகிக்கும் பொருட்களை வாங்கி அதில் காதல் கடிதத்தை வைத்து பரிசாக தரலாம். இது மனங்கவர்ந்தவரின் முகத்தில் மின்னல் ஒளியை தெரிக்கச் செய்யும்.
புத்தகம் உணர்த்தும் நேசம்
உங்களவர் புத்தகப் பிரியர் எனும் பட்சத்தில் அவருக்கு மிகவும் பிரியமான எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரியில் உங்களின் காதலை உணர்த்தும் வகையில் எழுதி பரிசளிக்கலாம்.
காதலரியை நினைக்கும்போது ஒவ்வொருவருக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டும். ஆனால் அதை எழுத நினைக்கும்போது வார்த்தை வராது...அதுதான் காதல். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது இல்லையா... முயலுங்கள், முடிந்தவரை அழகியலோடு காதலை வார்த்தைகளால் உணர்த்துங்கள்.
ஆல் தி பெஸ்ட்..



Click it and Unblock the Notifications











