Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
காதல் கடிதம்...நடுநடுவே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கணும்!

காதல் உணர்வுகளை கடிதத்தில் கொட்டியாகிவிட்டது. அதை எப்படி, எங்கே கொடுப்பது என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. சாதரணமாக நான்காக மடித்து நீட்டுவதை விட அதையே கிரியேட்டிவாக செய்தால் உங்கள் காதலுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்கின்றனர் காதல் எக்ஸ்பர்ட்கள்.
கண்ணாடி குடுவை, காதல் கடிதம்
அழகான கண்ணாடி குடுவையில் சின்னதாய் ஒரு சிவப்பு ரோஜா அதில் சுருட்டப்பட்ட கடிதம். அதனை மூட இதய சின்னம் வரைந்த கார்க் வைத்து அடைக்கப்பட்ட மூடி, அந்த பாட்டிலை சிவப்பு நிற ரிப்பனால் கட்டி உங்கள் மனங் கவர்ந்தவரிடம் கொடுத்துப் பாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்களவரின் முகம் வெட்கத்தில் சிவக்கும்.
ஒலிப்பதிவு கடிதம்
உருகி உருகி கடிதம் எழுதியிருந்தாலும், ஒலிப்பதிவு நாடாவில் உங்களுடைய குரலை பதிவு செய்து அந்த டேப்பில் உங்கள் கடிதத்தை அழகாக சுற்றி பரிசளிக்கலாம்.
அதோடு மனதிற்கு பிடித்த காதல் பாடல்களை அந்த ஒலிப்பதிவு நாடாவில் பதிந்து அதோடு கடிதத்தை கொடுத்தால் அதற்கு கிடைக்கும்
என்னா மரியாதை, என்னா மரியாதை...
இதயம் கவர்ந்தவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசிப்பதை விட அதிகம் உபயோகிக்கும், அவர்கள் அதிகம் விரும்பும் பொருட்களை நாம் பரிசளித்து நம் காதலை உணர்த்தலாம். குட்டித் தலையணை, அதிகம் தொடும் பேனா, விரல் தொடும் செல்போன் என மனங்கவர்ந்தவர் அதிகம் உபயோகிக்கும் பொருட்களை வாங்கி அதில் காதல் கடிதத்தை வைத்து பரிசாக தரலாம். இது மனங்கவர்ந்தவரின் முகத்தில் மின்னல் ஒளியை தெரிக்கச் செய்யும்.
புத்தகம் உணர்த்தும் நேசம்
உங்களவர் புத்தகப் பிரியர் எனும் பட்சத்தில் அவருக்கு மிகவும் பிரியமான எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரியில் உங்களின் காதலை உணர்த்தும் வகையில் எழுதி பரிசளிக்கலாம்.
காதலரியை நினைக்கும்போது ஒவ்வொருவருக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டும். ஆனால் அதை எழுத நினைக்கும்போது வார்த்தை வராது...அதுதான் காதல். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது இல்லையா... முயலுங்கள், முடிந்தவரை அழகியலோடு காதலை வார்த்தைகளால் உணர்த்துங்கள்.
ஆல் தி பெஸ்ட்..



Click it and Unblock the Notifications