Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
வேர்க்கடலை சட்னியை ஒருவாட்டி இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...
Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு தினமும் சட்னியை முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வசதிக்காக இன்று காலை டிபனுக்கு வேர்க்கடலை கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வெறும் 5 பொருட்களைக் கொண்டு வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள். இப்படி செய்யும் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, உப்புமாவுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி ஒருமுறை வேர்க்கடலை சட்னியை செய்தால், பின் இந்த பக்குவத்தில் தான் எப்போதும் வேர்க்கடலை சட்னியை செய்வீர்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 2-3
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 3 பல்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 1/2 கப்
துருவிய தேங்காய், சிறிது புளி, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பற்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











