Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
தக்காளி சூப்
மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது.
சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தக்காளி - 4-5
பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய்/ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் தக்காளியை போட்டு 5-10 நிமிடம் வேக வைத்து, பின் குளிர வைத்து, அந்த தக்காளியின் தோலை உரித்துவிட்டு, அதனை பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்/ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அடுத்து, வெங்காயம், ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, உப்பு, சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை உடனே ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி சூப் ரெடி!!! இதன்மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications











