Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி: ஸ்பெஷல் நவராத்திரி ரெசிபி
நவராத்திரி என்றால் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார், பருப்பு என்று பழைய ஸ்டைலைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லை. ஆகவே இந்த நவராத்திரிக்கு செய்யக்கூடியவாறு ஸ்பெஷலாக பசலைக்கீரை மற்றும் கொண்டைக்கடலை கம்பினேஷனில் ஒரு கிரேவி செய்யலாம். இந்த ரெசிபி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, உடலுக்கு மிகவும் நல்லது.
சரி, இப்போது நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபியான பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 கப் (ஊற வைத்தது)
பசலைக் கீரை - 1 கட்டு
தேங்காய் பால் - 1 1/2 கப்
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
பூண்டு - 4 பெரிய பற்கள் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
இஞ்சிப் பொடி - 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் இஞ்சி, பூண்டு, தக்காளி, எலுமிச்சை சாறு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து கொண்டைக்கடலையை சேர்த்து, கொண்டைக்கடலை பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்பு பசலைக் கீரையை சேர்த்து, கீரை நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.
கீரையானது நன்கு வதங்கியதும், அதில் தேங்காய் பால், உப்பு, இஞ்சி பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொண்டைக்கடலை வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications