Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
மைசூர் பருப்பு சாம்பார்
இந்திய உணவுகளில் பருப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய பல சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக பருப்புக்களில், துவரம் பருப்பு கொண்டு தான் சாம்பார் செய்வோம். ஆனால் எப்போதும் அந்த பருப்பைக் கொண்டே சமைத்து சாப்பிட்டால், போர் அடித்துவிடும். எனவே அவ்வப்போது, வேறு சில பருப்புக்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.
அந்த வகையில், இப்போது மைசூர் பருப்பைக் கொண்டு எளிமையான முறையில், விருப்பமான சில காய்கறிகளை சேர்த்து எப்படி சுவையான சாம்பார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
முருங்கைக் காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
பீன்ஸ் - 5-6 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் கிளறி, தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து கழுவி வைத்துள்ள மைசூர் பருப்பைப் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும் குக்கரைத் திறந்து, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி பரிமாறினால், சூப்பரான மைசூர் பருப்பு சாம்பார் ரெடி!!!



Click it and Unblock the Notifications












