Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மசாலா பாத்
காலை வேளையில் சற்று வேகமாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் காய்கறிகளை சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் கணவருக்கு கொடுத்தால், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் தானே?
அப்படியெனில் அதற்கு மஹாராஷ்ரா ஸ்பெஷல் ரெசிபியான மசாலா பாத் சரியானதாக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் கூட வெள்ளை சாதம் சமைப்பதற்கு இந்த மசாலா பாத் சமைத்து, குழம்புடன் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அந்த மசாலா பாத்தை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
கத்தரிக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
கோவைக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை கழுவி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் கத்தரிக்காய் மற்றும் கோவைக்காயை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைக்கும் போது சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை போட்டு நிமிடம் வறுத்து இறக்கி, பின் குளிரை வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.
நன்கு வதக்கியதும், தீயை சற்று உயர்த்தி, கழுவி வைத்துள்ள அரிசி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, குக்கரை மூடி 1-2 நிமிடம் விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது அருமையான மசாலா பாத் ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











