Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
மசாலா பாத்
காலை வேளையில் சற்று வேகமாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் காய்கறிகளை சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் கணவருக்கு கொடுத்தால், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் தானே?
அப்படியெனில் அதற்கு மஹாராஷ்ரா ஸ்பெஷல் ரெசிபியான மசாலா பாத் சரியானதாக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் கூட வெள்ளை சாதம் சமைப்பதற்கு இந்த மசாலா பாத் சமைத்து, குழம்புடன் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அந்த மசாலா பாத்தை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
கத்தரிக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
கோவைக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை கழுவி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் கத்தரிக்காய் மற்றும் கோவைக்காயை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைக்கும் போது சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை போட்டு நிமிடம் வறுத்து இறக்கி, பின் குளிரை வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.
நன்கு வதக்கியதும், தீயை சற்று உயர்த்தி, கழுவி வைத்துள்ள அரிசி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, குக்கரை மூடி 1-2 நிமிடம் விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது அருமையான மசாலா பாத் ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications