Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கொள்ளு உருண்டைக் குழம்பு
வாரம் ஒருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அத்தகையவர்கள் கொள்ளு உருண்டை குழம்பு சமைத்து சாப்பிட்டால், பின் கொள்ளு சாப்பிட மறுக்கமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் கொள்ளு மிகவும் சுவையாக இருக்கும்.
சரி, இப்போது அந்த கொள்ளு உருண்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் - 1-2
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
வறுத்து அரைப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - 1 கையளவு
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கொள்ளுவை நன்கு கழுவி, சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் ஊற வைத்துள்ள கொள்ளுவில் உள்ள நீரை வடித்து, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து ஓரளவு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, குழம்பில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி 15 நிமிடம் கழித்து பரிமாறினால், சுவையான கொள்ளு உருண்டைக் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications