Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கருணைக்கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்
பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து தாளிக்க
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கருணைக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். குக்கரிலும் வேக வைக்கலாம். கிழங்கின் தோலை உறித்து நன்றாக மசித்து வைக்கவும்.
பின்னர் வானலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெடித்த உடன் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். அந்த கலவையில் மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்கினை போட்டு நன்றாக பிரட்டவும்.
கிரேவி அதிகமாக வேண்டுமெனில் கால் டம்ளர் தண்ணீர் கூடுதலாக விடலாம். மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறலாம். மசியலானது எண்ணெய் மினுப்போடு சூப்பராக வரும். சூடாக சாதத்தில் போட்டு சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்தது.
கருணைக் கிழங்கை நீண்டநாட்கள் வைத்திருந்து சமைத்தால்தான் காரல் தன்மை இன்றி இருக்கும். நல்லெண்ணெயில் சமைப்பதால் அரிப்பு இருக்காது. ருசி கூடுதலாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications