Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
சுவையான...முந்திரிப்பருப்பு மசாலா

தேவையான பொருட்கள் :
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
பால் கோவா - 1 டேபிள் ஸ்பூன் (இனிப்பு சேர்க்காதது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு :
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (சிறியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
ஏலக்காய் - 1
மல்லி விதை - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5-6
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய தக்காளியை அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது கொத்தமல்லி, ஏலக்காய், மல்லி விதை, சோம்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம் போட்டு நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நெய்யும், அந்த தக்காளி கலவையும் தனித்தனியாக பிரியும் வரை வதக்கவும்.
பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் உற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் பால் கோவா, சீஸ், முந்திரிப் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயை கம்மியாக வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் மீதமுள்ள கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
இப்போது சுவையான முந்திரிப்பருப்பு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications