Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
சுவையான...முந்திரிப்பருப்பு மசாலா

தேவையான பொருட்கள் :
முந்திரிப்பருப்பு - 100 கிராம்
பால் கோவா - 1 டேபிள் ஸ்பூன் (இனிப்பு சேர்க்காதது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு :
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (சிறியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
ஏலக்காய் - 1
மல்லி விதை - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5-6
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய தக்காளியை அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது கொத்தமல்லி, ஏலக்காய், மல்லி விதை, சோம்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம் போட்டு நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நெய்யும், அந்த தக்காளி கலவையும் தனித்தனியாக பிரியும் வரை வதக்கவும்.
பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் உற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் பால் கோவா, சீஸ், முந்திரிப் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயை கம்மியாக வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் மீதமுள்ள கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
இப்போது சுவையான முந்திரிப்பருப்பு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications