இட்லி மஞ்சூரியன்

By Maha

Idli Manchurian
இட்லிகளை அளவுக்கு அதிகமாக சுட்டுவிட்டால், மீதமுள்ளவற்றை தூக்கிப் போடாமல், அதனை வைத்து இதுவரை உப்புமா தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம். அந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

இட்லி - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இட்லியை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இட்லித் துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி!!!

குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்த பின்னரே, இட்லிகளை போட்டு பொரிக்க வேண்டும். இல்லையென்றால், எண்ணெயை இட்லி குடித்துவிடும். பின் அதை சாப்பிடவே முடியாத அளவில் ஆகிவிடும்.

Story first published: Friday, October 12, 2012, 8:14 [IST]
Desktop Bottom Promotion