Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
பன்னீர் மஞ்சூரியன்
பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பல பன்னீர் ரெசிபிக்களை பார்த்திருப்போம். இப்போது சற்று வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை, அதுவும் மாலை வேளையில் வீட்டில் இருக்கும் போது, வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் ஒரு பன்னீர் ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.
அதன் பெயர் தான் பன்னீர் மஞ்சூரியன். சரி, அந்த பன்னீர் மஞ்சூரியன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ண்ய ஊற்றி, பன்னீர் துண்டுகளை 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கி, அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு பூண்டு, குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு மீதமுள்ள சோளமாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, நீர் வற்றும் வரை மென்மையாக பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி!!!



Click it and Unblock the Notifications