Just In
- 35 min ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 1 hr ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
Don't Miss
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுவையான பாவ் பாஜி!!!
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு
-
3
கேரட்
-
ஒரு
கப்
பீன்ஸ்
-
ஒரு
கப்
பச்சைபட்டாணி
-
1/2
கப்
காலிஃப்ளவர்
-
ஒரு
கப்
வெங்காயம்
-
ஒன்று
தக்காளி
-
இரண்டு
இஞ்சிபூண்டு
விழுது
-
1
1/2
ஸ்பூன்
மிளகாய்தூள்
-
ஒரு
ஸ்பூன்
தனியாத்தூள்
-
ஒரு
ஸ்பூன்
மஞ்சள்தூள்
-
அரை
ஸ்பூன்
சீரகத்தூள்
-
அரை
ஸ்பூன்
கரம்மசாலா
தூள்
-
ஒரு
ஸ்பூன்
எலுமிச்சை
சாறு
-
ஒரு
ஸ்பூன்
சோம்பு
-
சிறிது
கொத்தமல்லி
-
சிறிது
வெண்ணெய்
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
தேவையான
அளவு
பன்
-
ஐந்து
செய்முறை :
பாவ் பாஜி மசாலா செய்வதற்கு, முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் தோலை சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், பீன்ஸையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் வெந்நதும் நீரை வடித்து, மசித்துக் கொள்ளவும்.
பிறகு வெங்காயம், தக்காளியை சிறிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு அகன்ற வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் சோம்பைப் போடவும். சோம்பு பொரிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். அவை நன்கு வதங்கியதும் அத்துடன் நறுக்கிய காலிஃப்ளவரைப் போட்டு நன்கு வதக்கவும்.
காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள் போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.
பின் மசித்த அந்த காய்களைப் அத்துடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கலக்கவும். தண்ணீரை அதிகமாக விடக் கூடாது, மசாலாவிற்குத் தேவையான அளவே ஊற்ற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து மசாலாவில் தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும், அதில் எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பன்னின் நடுபகுதியை இரண்டாக நறுக்கி, அதன் மேல் வெண்ணெய்யைத் தடவி சூடாக்கிக் கொள்ளவும்.
இறுதியாக தயாரித்து வைத்திருந்த மசாலாவை பன்னின் நடுவே வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.