Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
தேங்காய் கறிவடகத் துவையல்
காலையில் இட்லிக்கு மிகவும் சுவையான சட்னி அல்லது துவையல் செய்ய நினைத்தால், தேங்காய் வடகத் துவையலை செய்யுங்கள். இது மிகவும் சுவையுடன் இருப்பதால், எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்பதே தெரியாதது. ஏனெனில் அந்த அளவில் ருசியாக இருக்கும்.
மேலும் இந்த துவையலை காலையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் கறிவடகத் துவையலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4-5
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 4-5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் மற்றும் வடகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் துருவிய தேங்காயை சேர்த்து, 30 நொடி வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்த வரமிளகாய், தேங்காய், வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் வடகத்தை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் மணமான தேங்காய் கறிவடகத் துவையல் ரெடி!!! இது தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











