Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
தேங்காய் பால் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
மல்லி - 3 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய் துருவி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலில் புளியை ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து மசாலாப் போல் நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வறுத்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பை சேர்த்து. 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் தீயை குறைவில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு ரெடி!!!



Click it and Unblock the Notifications











