Just In
- 15 min ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 3 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 3 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 4 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செட்டிநாடு காளான்
ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
காளான்
-
1
பாக்கெட்
(நறுக்கியது)
தக்காளி
-
1
(நறுக்கியது)
கடுகு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
2
டேபிள்
ஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
மசாலாவிற்கு...
வரமிளகாய்
-
3
உளுத்தம்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
கடலைப்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
சீரகம்
-
1
டீஸ்பூன்
மல்லி
-
1
டேபிள்
ஸ்பூன்
மிளகு
-
1
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் காளானை சேர்த்து காளானை நன்கு வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, 1-2 டேபிள் ஸ்பூன் அரைத்த மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு காளான் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi