Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கேரட் சாம்பார்
கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் தான் கேரட். இந்த கேரட்டை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ சத்தினால் பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு அதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ அல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம்.
இங்கு கேரட் சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
கேரட் - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
புளிச் சாறு - 1/4 கப்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட் மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு தீயை குறைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் தீயை அதிகரித்து, புளிச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் துவரம் பருப்பை சேர்த்து, சாம்பார் சற்று கெட்டியான பின், அதில கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கேரட் சாம்பார் ரெடி!!!
Image Courtesy: tamilveg



Click it and Unblock the Notifications