Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி
நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவை சாப்பிட வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உணவில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும். அத்தகையவர்களுக்கு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். குடைமிளகாயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
ஆகவே அத்தகைய குடைமிளகாய் கொண்டு, சூப்பரான முறையில் ஒரு சாப்பாத்தி செய்யலாம். இந்த சப்பாத்திக்கு குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி என்று பெயர். இப்போது அந்த குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
குடைமிளகாய் - 3 கப் (நறுக்கியது)
சீஸ் - 1 கப் (துருவியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஈரமான துணியால் மூடி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் குடைமிளகாய், சீஸ், மிளகாய் தூள், மல்லி தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது குடைமிளகாய் கலவையை வைத்து மூடி, மீண்டும் மெதுவாக அதனை சப்பாத்தி போன்று கலவை வெளிவராதவாறு தேய்க்க வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications