Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
குடைமிளகாய் போண்டா
மழைக் காலத்தில், மாலை வேளையானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும். அந்த நேரத்தில் டீ அல்லது காபியுடன், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இதுவரை எத்தனையோ போண்டாக்களை வீட்டில் செய்திருப்போம். ஆனால், வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாய் கொண்டு போண்டா செய்திருப்போமா!
ஆம், குடைமிளகாய் கொண்டும் போண்டா செய்யலாம். அதிலும் இது செய்வது மிகவும் எளிது. கீழே அந்த குடைமிளகாய் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1-2 (சிறியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலைமாவு, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதிலும் 5-8 நிமிடம் இருப்பது நல்லது. இதனால் குடமிளகாய் நன்கு வெந்திருக்கும். இதேப் போன்று மற்றொரு குடைமிளகாயையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் போண்டா ரெடி!!! அதன்பின் அதனை நான்கு பகுதிகளாக வெட்டி, அதனை விருப்பமான சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
இந்த குடைமிளகாய் போண்டாவில், குடைமிளகாயை துண்களாக்கியும் போண்டா செய்யலாம்.



Click it and Unblock the Notifications











