Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
குடைமிளகாய் போண்டா
மழைக் காலத்தில், மாலை வேளையானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும். அந்த நேரத்தில் டீ அல்லது காபியுடன், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இதுவரை எத்தனையோ போண்டாக்களை வீட்டில் செய்திருப்போம். ஆனால், வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாய் கொண்டு போண்டா செய்திருப்போமா!
ஆம், குடைமிளகாய் கொண்டும் போண்டா செய்யலாம். அதிலும் இது செய்வது மிகவும் எளிது. கீழே அந்த குடைமிளகாய் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1-2 (சிறியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலைமாவு, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதிலும் 5-8 நிமிடம் இருப்பது நல்லது. இதனால் குடமிளகாய் நன்கு வெந்திருக்கும். இதேப் போன்று மற்றொரு குடைமிளகாயையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் போண்டா ரெடி!!! அதன்பின் அதனை நான்கு பகுதிகளாக வெட்டி, அதனை விருப்பமான சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
இந்த குடைமிளகாய் போண்டாவில், குடைமிளகாயை துண்களாக்கியும் போண்டா செய்யலாம்.



Click it and Unblock the Notifications