Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
குடைமிளகாய் போண்டா
மழைக் காலத்தில், மாலை வேளையானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும். அந்த நேரத்தில் டீ அல்லது காபியுடன், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இதுவரை எத்தனையோ போண்டாக்களை வீட்டில் செய்திருப்போம். ஆனால், வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாய் கொண்டு போண்டா செய்திருப்போமா!
ஆம், குடைமிளகாய் கொண்டும் போண்டா செய்யலாம். அதிலும் இது செய்வது மிகவும் எளிது. கீழே அந்த குடைமிளகாய் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1-2 (சிறியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலைமாவு, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதிலும் 5-8 நிமிடம் இருப்பது நல்லது. இதனால் குடமிளகாய் நன்கு வெந்திருக்கும். இதேப் போன்று மற்றொரு குடைமிளகாயையும் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் போண்டா ரெடி!!! அதன்பின் அதனை நான்கு பகுதிகளாக வெட்டி, அதனை விருப்பமான சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
இந்த குடைமிளகாய் போண்டாவில், குடைமிளகாயை துண்களாக்கியும் போண்டா செய்யலாம்.



Click it and Unblock the Notifications