Latest Updates
-
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
ருசியான...மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:
மோர் - 4 கப் (சிறிது புளித்தது)
பூசணிக்காய் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6
வர மிளகாய் - 2
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி ஆகிய மூன்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய பூசணிக்காயை தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, ஓரளவு அரைத்து, அதில் இஞ்சியை தட்டி போடவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் மோரை ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து கிளறி, ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை, அதோடு சேர்த்து பிரட்டி, மிதமான தீயில் வைத்து வேகவிடவும். குழம்பு ரெடி ஆகும் போது, நுரைப் போல் பொங்கி வரும். அப்போது அதனை இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மோர் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











